ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதிஇந்துசமயமன்றம்

அனைவருக்கும் நமஸ்காரங்கள்!
ஸ்ரீகுருவாயூரப்பா சரணம்!

வருடந்தோறும் நடைபெறும் ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ வைபவமானது இந்த வருடமும் மகோன்னதமாக ஸ்ரீகுருவாயூரப்பன் திருவருளாலும், குருவருளாலும் நடைபெற உள்ளது. அதன் பூர்வாங்கமாக வழக்கம்போல்,
இடரெலாம் களையும்
ஸ்ரீமஹாகணபதி ஹோமம்,
செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீஸூக்த மஹாலக்ஷ்மி ஹோமம்,
நோய் தீர்த்து நலம் நல்கும் ஸ்ரீஆரோக்யலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீமஹாதன்வந்த்ரீ ஹோமம்,
சௌபாக்யம் அருளும் ஸுவாஸினி பூஜை மிகவிமரிசையாக நடைபெற உள்ளது. அதிவிசேஷமாக அச்சமயம், மிகப்புராதனமானதும், அற்புதமான பலனளிக்கக்கூடியதான ஸ்ரீமந்நாராயணீய ஸஹஸ்ரநாம அர்ச்சனை ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு செய்விக்கப்பட உள்ளது.
வருகின்ற விஸுவாவஸு வருடம் வைகாசி மாதம் 16ந்தேதி (30.05.2025), வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 11 மணிவரை சென்னை அருகில் மறைமலைநகர் இணைவு 2, ஐயப்பன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஹோம பூஜைகளுக்கு உதவிகள் பணமாகவோ, பொருளாகவோ வரவேற்கப்படுகிறது.
Gpay no.9789007401
(raghavathreya)
அல்லது கீழ்க்கண்ட ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் வங்கிக்கணக்கு அல்லது QR CODEலும் செலுத்தலாம். தங்கள் கோத்ரம், நக்ஷத்ரம், பெயர் , மொபைல் நம்பர்விவரம் மற்றும் பணம் அனுப்பியதன் காப்பியோடு 9789007401 வாட்ஸ்ஆப் நம்பரில் அனுப்பிவிடவும்.
குறிப்பு: ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞம் 2025 இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Namaskaram to all!

Pls send the Donations to the bank account given below.

Donations are eligible u/s 80 G

SRI SANKARA SANATHANA SEVA SAMSTHANAM

KARUR VYSYA BANK CURRENT ACCOUNT NO. 1657115000005138
IFSC CODE: KVBL0001657
BRANCH. GUDUVANCHERI

ஸ்ரீசங்கர- ஸ்ரீராமானுஜ ஜயந்தி மஹோத்ஸவம்

இன்று 02.05.25 வெள்ளிக்கிழமை ஸ்ரீசங்கர- ஸ்ரீராமானுஜ ஜயந்தி மஹோத்ஸவம் வெகு விமரிசையாக மறைமலைநகர் அய்யப்பன் திருக்கோவிலில் நடைபெற்றது. இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் திரளான ஆஸ்தீக அன்பர்கள் கலந்துகொண்டனர். மஹாகணபதி பூஜை, ஸ்ரீமஹாலக்ஷ்மி பூஜை, ஸ்ரீஆசார்யர்களுக்கு பூஜை மற்றும் ஸ்தோத்ர பாராயணங்கள், குருவந்தனத்துடன் நிறைவுற்ற இந்நிகழ்ச்சியில் இரவு சிற்றுண்டி, ப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ஸ்ரீசங்கர ஜயந்தி!

பாரத தேசத்தை, சனாதன ஹிந்து தர்மத்தை புனருத்தாரணம் செய்து, வேதநெறி தழைத்தோங்க, அறுவகை சமயம் செழிக்கப்பண்ணியவர். எண்ணற்ற ஸ்லோகங்கள், வேத பாஷ்யம் என 32 வயதில் அவர் செய்தருளிய விஷயங்கள் பிரமிக்கத்தக்கது. சம்புவாகிய பரமேஸ்வரனே இந்த பூலோகத்தில் ஸ்ரீசங்கராச்சார்யராக அவதரித்தருளினார். அவருடைய ஜயந்தி தினத்தில் ஒப்பற்ற ஜகத்குருவாம் ஸ்ரீஆசார்ய சங்கரரை பணிவோம். அவரே அமர்ந்தருளியதும், வாழையடி வாழையாக வந்த குருமரபானதும், மூலாம்னாய ஸர்வக்ஞபீடமான ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்து ஆசார்யஸ்வாமிகளை போற்றி வணங்குவோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்,
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு.

ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம்அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!

ஸ்ரீகுருப்யோ நம!
ஆதிசங்கரரிலிருந்து இன்றுவரை இடையறாத ஞான ஸாகரமாய், ஸனாதன தர்மத்தின் ஆணிவேராய், ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வக்ஞ ஜகத்குரு பீடாதீச்வரராக யதி தர்மத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் நமது ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் 71வது ஆசார்ய ஸ்வாமிகளை நமக்களித்த ஸ்ரீபெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களை பக்தியோடு நமஸ்கரித்து பணிவோம். புதுப்பெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளை அனந்தகோடி நமஸ்காரங்களுடன் பணிந்து போற்றுவோம்.
குரு சேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

அக்ஷயதிருதியை

அனைவருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி அனுக்ரஹம், அக்ஷயதிருதியை சுபநாளில் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்திக்கிறோம்.
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி,
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம் மற்றும்
இந்துசமயமன்றம்

மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனை

இந்துசமயமன்றம் சார்பில்
ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனையை முன்னிட்டு இன்று (11.03.25, செவ்வாய்) நடைபாதை ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு அன்னதானம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருடன் அவரவர் இடம்தேடிப்போய் வழங்கப்பட்டது. அனுஷஅமிர்தம் க.இராமச்சந்திரன், செல்வம் மற்றும் ஷ்யாம் ஆகியோர் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்துசமயமன்றம் சார்பில் வாழ்த்துக்கள்!

ஏழாவது வார்ஷிக ஆராதனை

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரரும் ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனை புண்யதினமாகிய இன்று (11.03.25, செவ்வாய்) ஸ்ரீஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் சார்பில் பக்திபூர்வமாக நமஸ்கரித்து வணங்குகிறோம்.

புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன் மற்றும் மன்ற அன்பர்கள்.

மஹாஸ்வாமிகளின் 57வது ஜயந்தி

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடத்தின் பீடாதீச்வரரும் ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 57வது ஜயந்தி தினத்தில் பக்திபூர்வமான ஹ்ருதயபூர்வமான அனந்தகோடி நமஸ்காரங்களை ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொன்னார்திருவடிகளில் சமர்ப்பிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு.