ஸ்ரீசங்கரமடத்தில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் 133வது ஜயந்தி விழா

இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் சார்பில் 30.05.26 சனிக்கிழமை மாலை 6மணி முதல் 8 மணிவரை கிழக்குதாம்பரம் சகடபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் 133வது ஜயந்தி விழா யுடியூப் காணொளியில் காணுங்கள்

மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஸ்ரீஸ்வாமிகளின் ஜயந்தி நன்னாளில் பக்தியுடன் நமஸ்கரிக்கிறது.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்

ஸ்ரீபூர்ணா புஷ்கலா சமேத தர்மஸாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம், ஸ்ரீக்ருஷ்ணபவனம் டிரஸ்டின் ஆன்மீக அமைப்பான ஸ்ரீதர்மஸாஸ்தா சேவா சமிதி மற்றும் மறைமலைநகர் ஆஸ்தீக ஸமாஜம் இணைந்து கடந்த 01.05.2026 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி நன்னாளில், மறைமலைநகர் இணைவு 2ல் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீஅய்யப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு ஸ்ரீபூர்ணா புஷ்கலா சமேத தர்மஸாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை ஸ்ரீமஹாகணபதி ஹோமம், ஸ்ரீஅய்யப்ப ஸ்வாமிக்கு மஹா அபிஷேகம் மற்றும் பஜனை பத்ததியிலான திருக்கல்யாண உத்ஸவம் நடந்தது. ப்ரம்மஸ்ரீ.கே.வி.ஸுப்ரமண்ய ஸாஸ்த்ரிகள் ஹோமம் மற்றும் வைதீக கார்யக்ரமங்களை நடத்திட, நாகை ஸ்ரீ.சுந்தரராஜ பாகவதர் குழுவினர் திருக்கல்யாண த்தை பாகவத ஸம்ப்ரதாயப்படி நடத்தினார்கள். சுமார் ஐநூற் பேர்வரை கலந்துகொண்ட இவ்விழாவில் காலை சிறப்பான சிற்றுண்டி, மதியம் திருக்கல்யாண விருந்து, பக்ஷணங்களுடன் தாம்பூலப்பை அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் மறைமலைநகர் குழுவினரின் சேவை மகத்தானது. ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்,வேதபாரதி, தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அனுஷ அமிர்தம் மற்றும் பல ஆன்மீக அமைப்புகளைச்சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீசங்கர ஜயந்தி அஷ்டோத்ர பூஜைகள்

ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதியின் அக்ஷயதிருதியை ஹோமங்களோடு ஸ்ரீசங்கர ஜயந்தி அஷ்டோத்ர பூஜைகள், ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீகுபேரர், ஸ்ரீமஹாபெரியவர் அஷ்டோத்ர பூஜைகளும், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ர பாராயணம், ஸ்ரீமந்நாராயணீயம் நூறாவது தசக பாராயணமும் மிகுந்த பக்தியுடன் நடந்தேறியது. ஸ்ரீமதி.ஜெயலலிதா ஸ்ரீனிவாஸன், ஸ்ரீமதி. சத்யபாமா கோபாலன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சைதாப்பேட்டை மண்டலி ஸ்ரீமதி.சாந்தி ராமசாமி, சரணாகதி மண்டலி ஸ்ரீமதி.மீனாக்ஷி மாமி, ஸ்ரீமதி.பார்வதிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேதபாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அனுஷ அமிர்தம், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், தர்ம ஸாஸ்தா சேவா சமிதி, ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீசரணாகதி, ஸ்ரீமஹாபெரியவர் சத்சங்கம், சூளைமேடு, ஆதம்பாக்கம் மண்டலி, ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா, மாடம்பாக்கம் ஜனகல்யாண் முக்கிய நிர்வாகிகள், அன்பர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீசங்கர ஜயந்தி!

ஜகத்குரு ஸ்ரீசங்கரரின் திருவடிகள் சரணம்!
இந்துசமயமன்றம்
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்

இந்துசமயமன்றம் சார்பில் நான்காம் ஆண்டு அக்ஷய திருதியை விழா, ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோத்ஸவம்,
மற்றும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் சன்யாஸ ஸ்வீகார தின மஹோத்ஸவம் விசேஷ ஹோம, பூஜைகள், பாராயணங்களுடன் நடைபெறவுள்ளது.

இனிய தமிழ்ப்புத்தாண்டு (பராபவ வருஷம்) நல்வாழ்த்துக்கள்!

செல்வ வளமுடன், உடல்நலத்துடன், உள்ள மகிழ்வுடன், குருவின் அருளுடன் குறைவிலாது வாழ,
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு (பராபவ வருஷம்) நல்வாழ்த்துக்கள்!
இந்துசமயமன்றம்
(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு),
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்,
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி