ஸ்ரீக்ருஷ்ணாய துப்யம் நமஹ!
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ மேளா 2026ல் கலந்துகொள்ள அனைத்து பாராயண மண்டலியினரையும் இருகரம்கூப்பி அழைக்கிறோம். தொடர்ந்து ஆறாவது மேளா மிகச்சிறப்பாக ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் குருவருளுடன், குருவாயூரப்பன் திருவருளுடன் நடைபெற உள்ளது. அதுவும் ஸ்ரீக்ருஷ்ணஜயந்திக்கு அடுத்த இரண்டாவதுநாளே கோபாலனை கொண்டாடப்போகிறோம். நமது சமிதியின் விசேஷ நிகழ்வுகளான ஸ்ரீக்ருஷ்ண ஜனனோத்ஸவம், கோவிந்த பட்டாபிஷேகம், ராஸக்ரீடை கோலாட்டம், ஸ்ரீருக்மிணீ கல்யாண மஹோத்ஸவம் அனைத்தும் விஸ்தாரமாய் நடக்கும். கண்ணனை நந்தகோகுலத்தில், வ்ரஜத்தில் அனுபவிப்பது போன்ற உணர்வுடன் அனைவரும் கோபிகைகளாய், அச்சுதக்ருஷ்ணனை, அனந்தனை ஆராதிக்கப்போகிறோம். ஆகாரம் மற்றும் இருக்கை ஏற்பாடுகளுக்காக வழக்கம்போல இதற்கு முன்பதிவு அவசியமாகிறது. மண்டலியினர் தங்கள் குரு அல்லது அமைப்பாளர் பெயர், தொடர்பு மொபைல் எண் (வாட்ஸ்ஆப் நம்பர்), எந்த ஊர் விவரம், மண்டலி பெயர், கலந்து கொள்ளும் நபர்கள் எண்ணிக்கை குறிப்பிட்டு கீழ்க்கண்ட வாட்ஸ்ஆப் எண்களில் அனுப்பவும். தனியாக கலந்துகொள்வோர் அவரவர் பெயர், ஊர், மொபைல் எண், நபர் எண்ணிக்கை அனுப்பவும். பதிவு செய்ய கடைசி நாள்: வருகிற ஆகஸ்டு ஒன்றாம் தேதி (01.08.2026)
பதிவுக்கட்டணம் கிடையாது.
விவரம் அனுப்பவேண்டிய வாட்ஸ்ஆப் எண்கள் (ஏதாவது ஒன்றில் மட்டும்) 9789007401 (or) 9444613198.
பத்திரிகையில் உள்ள மற்ற மொபைல் எண்களிலும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்ளலாம். நாங்கள் கேட்ட விவரம் மட்டும் மேற்கண்ட இரண்டு எண்ணில் மட்டுமே அனுப்பவும்.
இதுவரை ஸ்ரீமந்நாராயணீய யக்ஞம் குழுவில் இல்லாதவர்கள் உடன் சேர்ந்துவிட வேண்டுகிறோம். அப்போதுதான் உடனுக்குடன் மேளா விவரங்கள் தங்களுக்கு வந்து சேரும்.
இவண்,
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி நிர்வாகம்

Sri Krishnaya Tubhyam Namah!

We extend our heartfelt invitation to all Srimannarayaniya Parayana Mandalis (recitation groups) to participate in the Srimannarayaniya Parayana Yajna Mela 2026.

With the divine blessings of Sri Kanchi Maha Periyava and Lord Guruvayurappan, this sixth consecutive Mela is set to be conducted in a grand and auspicious manner. Significantly, we will be celebrating Lord Gopāla on the second day following Sri Krishna Jayanthi.

The special events organized by our Samithi—including Sri Krishna Jananotsavam (celebration of Lord Krishna’s birth), Govinda Pattabhishekam (coronation of Lord Govinda), Rasa Krida Kolattam (the divine Rasa dance with Kolattam), and Sri Rukmini Kalyana Mahotsavam (the grand wedding festival of Lord Krishna and Rukmini)—will all be celebrated elaborately.

Together, we shall worship Achyuta Krishna, the Infinite One, with the feeling of experiencing Him in Nandagokulam and Vraja, immersing ourselves in devotion as though we are the Gopikās themselves.

As usual, advance registration is mandatory to facilitate arrangements for seating and meals.

For Parayana Mandalis, kindly send the following details via WhatsApp:

•⁠ ⁠Name of the Guru or Organizer

•⁠ ⁠Contact mobile number (WhatsApp number)

•⁠ ⁠Town/City

•⁠ ⁠Name of the Mandali

•⁠ ⁠Number of participants

Individuals attending independently should send:

•⁠ ⁠Name

•⁠ ⁠Town/City

•⁠ ⁠Mobile number

•⁠ ⁠Number of participants

Last date for registration: 1st August 2026 (01.08.2026)

There is no registration fee.

Please send the required details only to either one of the following WhatsApp numbers:

9789007401

9444613198

If you have any queries, you may contact any of the other mobile numbers mentioned in the invitation brochure. However, please send the registration details only to the above two WhatsApp numbers.

Those who are not yet members of the Srimannarayaniya Yajna WhatsApp Group are requested to join at the earliest so that all updates and announcements regarding the Mela reach you promptly.

With regards,

Administration
Srimannarayaniya Parayana Yajna Samithi

ஸ்ரீசங்கரமடத்தில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் 133வது ஜயந்தி விழா

இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் சார்பில் 30.05.26 சனிக்கிழமை மாலை 6மணி முதல் 8 மணிவரை கிழக்குதாம்பரம் சகடபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் 133வது ஜயந்தி விழா யுடியூப் காணொளியில் காணுங்கள்

மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஸ்ரீஸ்வாமிகளின் ஜயந்தி நன்னாளில் பக்தியுடன் நமஸ்கரிக்கிறது.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்

ஸ்ரீபூர்ணா புஷ்கலா சமேத தர்மஸாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம், ஸ்ரீக்ருஷ்ணபவனம் டிரஸ்டின் ஆன்மீக அமைப்பான ஸ்ரீதர்மஸாஸ்தா சேவா சமிதி மற்றும் மறைமலைநகர் ஆஸ்தீக ஸமாஜம் இணைந்து கடந்த 01.05.2026 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி நன்னாளில், மறைமலைநகர் இணைவு 2ல் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீஅய்யப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு ஸ்ரீபூர்ணா புஷ்கலா சமேத தர்மஸாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை ஸ்ரீமஹாகணபதி ஹோமம், ஸ்ரீஅய்யப்ப ஸ்வாமிக்கு மஹா அபிஷேகம் மற்றும் பஜனை பத்ததியிலான திருக்கல்யாண உத்ஸவம் நடந்தது. ப்ரம்மஸ்ரீ.கே.வி.ஸுப்ரமண்ய ஸாஸ்த்ரிகள் ஹோமம் மற்றும் வைதீக கார்யக்ரமங்களை நடத்திட, நாகை ஸ்ரீ.சுந்தரராஜ பாகவதர் குழுவினர் திருக்கல்யாண த்தை பாகவத ஸம்ப்ரதாயப்படி நடத்தினார்கள். சுமார் ஐநூற் பேர்வரை கலந்துகொண்ட இவ்விழாவில் காலை சிறப்பான சிற்றுண்டி, மதியம் திருக்கல்யாண விருந்து, பக்ஷணங்களுடன் தாம்பூலப்பை அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் மறைமலைநகர் குழுவினரின் சேவை மகத்தானது. ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்,வேதபாரதி, தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அனுஷ அமிர்தம் மற்றும் பல ஆன்மீக அமைப்புகளைச்சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீசங்கர ஜயந்தி அஷ்டோத்ர பூஜைகள்

ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதியின் அக்ஷயதிருதியை ஹோமங்களோடு ஸ்ரீசங்கர ஜயந்தி அஷ்டோத்ர பூஜைகள், ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீகுபேரர், ஸ்ரீமஹாபெரியவர் அஷ்டோத்ர பூஜைகளும், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ர பாராயணம், ஸ்ரீமந்நாராயணீயம் நூறாவது தசக பாராயணமும் மிகுந்த பக்தியுடன் நடந்தேறியது. ஸ்ரீமதி.ஜெயலலிதா ஸ்ரீனிவாஸன், ஸ்ரீமதி. சத்யபாமா கோபாலன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சைதாப்பேட்டை மண்டலி ஸ்ரீமதி.சாந்தி ராமசாமி, சரணாகதி மண்டலி ஸ்ரீமதி.மீனாக்ஷி மாமி, ஸ்ரீமதி.பார்வதிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேதபாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அனுஷ அமிர்தம், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், தர்ம ஸாஸ்தா சேவா சமிதி, ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீசரணாகதி, ஸ்ரீமஹாபெரியவர் சத்சங்கம், சூளைமேடு, ஆதம்பாக்கம் மண்டலி, ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா, மாடம்பாக்கம் ஜனகல்யாண் முக்கிய நிர்வாகிகள், அன்பர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீசங்கர ஜயந்தி!

ஜகத்குரு ஸ்ரீசங்கரரின் திருவடிகள் சரணம்!
இந்துசமயமன்றம்
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்

இந்துசமயமன்றம் சார்பில் நான்காம் ஆண்டு அக்ஷய திருதியை விழா, ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோத்ஸவம்,
மற்றும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் சன்யாஸ ஸ்வீகார தின மஹோத்ஸவம் விசேஷ ஹோம, பூஜைகள், பாராயணங்களுடன் நடைபெறவுள்ளது.