இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி தொடர்ந்து நான்காவதாண்டாக ஸ்வாமிகள் அவதரித்த தண்டலம் கிராமத்தில் நடத்தப்பெற்ற கோபூஜை விழா தொகுப்பு மற்றும் அடியேனின் சிற்றுரை – ஸ்ரீமடத்தின் அதிகாரபூர்வ வெளியீடு
ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 58வது ஜயந்தி
ஸ்ரீகுருப்யோ நம!
மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரும், ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 58வது ஜயந்தி புனித நன்னாளில், இந்துசமயமன்றம் சார்பில் (ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பு) பக்தியுடன் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பாத கமலங்களை பணிந்து வணங்குகிறோம்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
மற்றும் கிளை அமைப்பாளர்கள்
இந்துசமயமன்றம்
மற்றும்
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்

திருவிளக்கு பூஜை
இந்துசமயமன்றத்தின் சார்பில்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீபெரியவர்கள் அவதரித்த திருத்தலமான திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகிலுள்ள தண்டலத்தில் மிகவிமரிசையாக திருவிளக்கு பூஜை அருள்மிகு காமாக்ஷியம்மன் உடனுறை ஸ்ரீதரணீச்வரஸ்வாமி தேவஸ்தான வளாகத்தில் 10.03.26 செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.கயிலாய வாத்தியத்துடன் கிராமதேவதையான பொன்னியம்மன் கோவில் இருந்து, வேதபாடசாலை வித்யார்த்திகள், திரளான ஊர் மக்களுடன் ஸ்ரீபெரியவர்கள் திருவுருவப்பட ஊர்வலம் ‘ஜய ஜய சங்கர’ கோஷத்துடன் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையினை இந்துசமயமன்ற அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் நடத்திவைத்தார். ஸ்ரீசங்கரா கலை கல்லூரி முதல்வர் முனைவர்.கலைராம வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார். ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, ஸ்ரீ.M.K.ஸ்ரீதர் மற்றும் ஊர் முக்யஸ்தர்கள் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்து கலந்துகொண்டனர்.










சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் ஜயந்தி மஹோத்ஸவத்தின்
இந்துசமயமன்றத்தின் சார்பில் 10.03.26 செவ்வாயன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தண்டலத்தில் (ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவதரித்த தலம்) மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக சிறப்பாக கிராமப் பொதுமக்கள் பங்கேற்புடன் நான்காவது வருடமாக நடந்த
கோபூஜை காட்சிகள்.






ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீ. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் திருஉருவ சிலை அவர்களது ஆராதனை தினமான இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது சங்கராச்சார்ய ஸ்வாமிகளான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் எட்டாவது வார்ஷிக ஆராதனை ஸமயத்தில், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஸ்ரீசரணர்களின் திவ்ய திருவடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்களுடன் புஷ்பாஞ்சலிகளை பக்தியுடன் சமர்ப்பிக்கிறது.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்

ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் சார்பில் நடக்கும் ஸத்கார்யங்கள் விவரம் சமர்ப்பிக்கப்பட்டது
03.02.2026 செவ்வாயன்று காஞ்சி ஸ்ரீமடத்தில் மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர்களின் சந்நிதியில், இந்து சமய மன்றம் மற்றும் ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் சார்பில் நடக்கும் ஸத்கார்யங்கள் விவரம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீஆசார்யஸ்வாமிகள், மயிலாடுதுறை மாவட்டம், சிவனாரகரம் கிராமத்தில் நமது டிரஸ்ட் சார்பில் ஸ்ரீசந்த்ரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் அனுஷ்டான கேந்திரம், யாத்ரீ நிவாஸ் நிர்மாணிக்க அனுக்ரஹித்தருளினார்கள். இதற்கான நிலம் நமது டிரஸ்டி ஸ்ரீமான்.வெங்கட்ராமய்யர் மற்றும் ஸ்ரீமதி.அலமேலு கணேசன் ஆகியோரால் அன்புடன் தானமாக டிரஸ்டிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் முதன்மை டிரஸ்டிகளான புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஆடிட்டர் ஸ்ரீகாந்திற்கு சால்வையும், ஆசியும் வழங்கியருளினார்கள்.










பொங்கல் விழா

















செங்கல்பட்டு மாவட்டம் கலிவந்தப்பட்டு கிராமத்தில் பழங்குடி மக்கள் பகுதியில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த வருடமும், ஸ்ரீகாஞ்சி சங்கரமடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில், 04.01.26 ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறப்பாக பொங்கல் விழா பழங்குடி மக்களின் குலதெய்வ பூஜையுடன் நடைபெற்றது. இதில் வழக்கம்போல ஆதரவளிக்கும் சகோதர அமைப்புகளான ஸ்ரீக்ருஷ்ணபவனம் டிரஸ்ட், மறைமலைநகர், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா,அனுஷ அமிர்தம் மற்றும் ஊரப்பாக்கம் வேதபாரதி ஆகியவற்றின் பிரதிநிதிகள், மற்றும் ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர். பழங்குடி மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான புத்தாடைகள், பொங்கல் பொருட்கள் (முதல்தர பச்சரிசி, மில்க்மிஸ்ட் நெய், முந்திரி, ஏலக்காய், ஸாகம்பரி பாகு வெல்லம், பாசிப்பருப்பு, எல்.ஜி சாம்பார் பொடி, மல்லித்தூள், மஞ்சள் தூள்) ஆகியவை வழங்கப்பட்டன. கேசரி, மணக்கும் வெஜிடபிள் பிரியாணி, கத்தரிக்காய் கொத்சு, மினரல் வாட்டர் பாட்டில் அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன் வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவருந்தினர். சனாதன இந்து சமத்துவ சமுதாயம் மலர ஸ்ரீகாஞ்சிப்பெரியவர்கள் அருளாசியுடன் நடைபெற்ற இந்த பொங்கல் விழா இனிதே நடந்தேறியது.
ஸ்ரீமங்களகாமாக்ஷி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமி திருக்கல்யாண வைபவம்
25.12.25 வியாழக்கிழமை மறைமலைநகரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீமங்களகாமாக்ஷி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமி திருக்கல்யாண வைபவம் மற்றும் ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரருக்கு சிவ ஸஹஸ்ரநாம ருத்ராக்ஷ அர்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, இந்துசமயமன்றம், மறைமலைநகர் பிராமணர்கள் சங்கம், வேதபாரதி, அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும், சிவனடியார்களும் கலந்துகொண்டனர்.




















