இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் தஞ்சாவூர் பாபநாசம் அருகில் உமையாள்புரம் உயர்நிலைப்பள்ளில் நடைபெற்றது. வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு மிகச்சிறந்த சமயச்சொற்பொழிவாளரும், அப்பகுதி இந்துசமயமன்ற அமைப்பாளருமான ஸ்ரீமதி.லலிதா வெங்கடேசன் அவர்கள் வாழ்த்தி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்கள். இந்துசமயமன்றம் சார்பில் மாணவ , மாணவியருக்கு வாழ்த்துக்களையும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியப்பெருமக்களுக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறோம். இந்த சத்கைங்கர்யத்திற்கு முயற்சி எடுத்த அன்பு ஸஹோதரி.ஸ்ரீமதி லலிதா வெங்கடேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!