இந்துசமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு

இந்துசமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு சான்றிதழ் வழங்கும் விழா 03.07.2022 ஞாயிற்றுக்கிழமை மதுராந்தகம் அருகில் வேதவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. நாற்பது குழந்தைகள் பத்துநாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ், நோட்டு, எழுது கருவிகள், ஆன்மீக புத்தகம் இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது. இதற்காக பெருமுயற்சி எடுத்த செங்கை தெற்கு மாவட்ட இந்துமுன்னணி தலைவர் ஸ்ரீ.ஏழுமலை அவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டி சால்வை போர்த்தி நினைவு புத்தகப்பரிசு இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது. பரிசுகளை பேராசிரியர் டாக்டர்.சிவசிதம்பரநாதன் மற்றும் அனுஷ அமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.