இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி தொடர்ந்து நான்காவதாண்டாக ஸ்வாமிகள் அவதரித்த தண்டலம் கிராமத்தில் நடத்தப்பெற்ற கோபூஜை விழா தொகுப்பு மற்றும் அடியேனின் சிற்றுரை – ஸ்ரீமடத்தின் அதிகாரபூர்வ வெளியீடு
Month: March 2026
ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 58வது ஜயந்தி
ஸ்ரீகுருப்யோ நம!
மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரும், ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 58வது ஜயந்தி புனித நன்னாளில், இந்துசமயமன்றம் சார்பில் (ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பு) பக்தியுடன் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பாத கமலங்களை பணிந்து வணங்குகிறோம்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
மற்றும் கிளை அமைப்பாளர்கள்
இந்துசமயமன்றம்
மற்றும்
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்

திருவிளக்கு பூஜை
இந்துசமயமன்றத்தின் சார்பில்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீபெரியவர்கள் அவதரித்த திருத்தலமான திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகிலுள்ள தண்டலத்தில் மிகவிமரிசையாக திருவிளக்கு பூஜை அருள்மிகு காமாக்ஷியம்மன் உடனுறை ஸ்ரீதரணீச்வரஸ்வாமி தேவஸ்தான வளாகத்தில் 10.03.26 செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.கயிலாய வாத்தியத்துடன் கிராமதேவதையான பொன்னியம்மன் கோவில் இருந்து, வேதபாடசாலை வித்யார்த்திகள், திரளான ஊர் மக்களுடன் ஸ்ரீபெரியவர்கள் திருவுருவப்பட ஊர்வலம் ‘ஜய ஜய சங்கர’ கோஷத்துடன் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையினை இந்துசமயமன்ற அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் நடத்திவைத்தார். ஸ்ரீசங்கரா கலை கல்லூரி முதல்வர் முனைவர்.கலைராம வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார். ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, ஸ்ரீ.M.K.ஸ்ரீதர் மற்றும் ஊர் முக்யஸ்தர்கள் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்து கலந்துகொண்டனர்.










சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் ஜயந்தி மஹோத்ஸவத்தின்
இந்துசமயமன்றத்தின் சார்பில் 10.03.26 செவ்வாயன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தண்டலத்தில் (ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவதரித்த தலம்) மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக சிறப்பாக கிராமப் பொதுமக்கள் பங்கேற்புடன் நான்காவது வருடமாக நடந்த
கோபூஜை காட்சிகள்.









