ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் வரும் ஞாயிறு அன்று (11.08.2018)

இந்து சமய மன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீபாலப்பெரியவாளின் ஆக்ஞைப்படி நங்கநல்லூர் ஸ்ரீரமணி ஹாலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு (புதுப்பெரியவாளுக்கு) ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் வரும் ஞாயிறு அன்று (11.08.2018) அன்று மாலை 4மணியளவில் நடைபெறவுள்ளது. மன்றக்குழுவினரின்திருமுறை பாராயணம், அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் சார்பில் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், நங்கநல்லூர் அனுஷம் வழிபாட்டுக்குழு ஸ்ரீமகேஷ் அவர்கள் தலைமையில் சத்சங்கம், ஸ்ரீபால சத்சங் குழுவினர், நங்கநல்லூர் சார்பில் நாமசங்கீர்த்தனம், ஸ்ரீஆசார்யாளுக்கு புஷ்பாஞ்சலி, ஹாரத்தி, ப்ரசாதம் என ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடன் நடைபெறவுள்ளது. திரளாக கலந்துகொண்டு ஆசார்யாள் அருள் பெற ப்ரார்த்திக்கிறோம்.

அமைப்பாளர்கள்: புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் , ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்