இன்று 02.05.25 வெள்ளிக்கிழமை ஸ்ரீசங்கர- ஸ்ரீராமானுஜ ஜயந்தி மஹோத்ஸவம் வெகு விமரிசையாக மறைமலைநகர் அய்யப்பன் திருக்கோவிலில் நடைபெற்றது. இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் திரளான ஆஸ்தீக அன்பர்கள் கலந்துகொண்டனர். மஹாகணபதி பூஜை, ஸ்ரீமஹாலக்ஷ்மி பூஜை, ஸ்ரீஆசார்யர்களுக்கு பூஜை மற்றும் ஸ்தோத்ர பாராயணங்கள், குருவந்தனத்துடன் நிறைவுற்ற இந்நிகழ்ச்சியில் இரவு சிற்றுண்டி, ப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.




