சிவாய நம!
இந்துசமயமன்றம் சார்பில் நேற்று இரவு மஹாசிவராத்திரி புனித நாளையொட்டி இரவு முழுவதும் திருவாசக முற்றோதுதல் பல ஆலயங்களில் நடைபெற்றது. டிபன்ஸ்காலனி கோவிலில் ருத்ராக்ஷ லிங்கம் எழுந்தருளச்செய்து பூஜைகள் நடந்தது. அதேபோல் பல கிராமக்கோவில்களுக்கு திருவிளக்கேற்ற நல்லெண்ணெய் திரியுடன் வழங்கப்பட்டது. நமது சமயமன்ற அன்பர்களால் சுடச்சுட பாதாம்பால் மற்றும் குட் டே பிஸ்கட் சுமார் எட்டு சிவபெருமான் திருக்கோவில்களில் வழங்கப்பட்டது. ஸ்ரீபெரியவர்கள் ஐயந்தியையொட்டி நமது மன்றத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற கோளறுபதிகம் சிறு பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.









