ஸ்ரீமந்நாராயணீய பாராயணம்

இந்துசமயமன்ற சூளைமேடு கிளை அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் இன்று அவிட்டபூஜை சிறப்பாக உலகநலன் வேண்டி நடைபெற்றது. பஞ்சலோக விக்ரஹ ஸ்வரூபமாகஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமஹாபெரியவர்களும் ஸ்ரீபுதுப்பெரியவர்களும் மும்மூர்த்திகளாய் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே சூளைமேடு இந்துசமயமன்ற கிளை சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மும்முறை இப்பெரியவர்களின் அருள்முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஏகதின நாராயணீய பாராயணம் நடைபெற்றுவருகிறது.