ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதியின் ஐந்தாவது மேளா

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் ஒரு அங்கமான ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதியின் ஐந்தாவது மேளா 5.10.2025 அன்று சென்னை ராஜகீழ்பாக்கம் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமி வித்யா மந்திரில் மிகப்ரம்மாண்டமாக, மிக கோலாகலமாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் முன்னிலையில் ஸ்ரீஸ்வாமிகளின் ஆக்ஞையின்பேரில் நடத்தப்பெற்றது.
இந்துசமயமன்றம் ஏற்பாட்டில் நடந்த இந்த புனித மேளாவில் ஆயிரம் பேர் வரை க்ருஷ்ணபக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் மகுடமாக ஸ்ரீசரணர்கள் அனுக்ரஹ பாஷணம் வழங்கினார்கள். இந்த நிகழ்வினை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம்.