இன்றைய நாகை மாவட்டம், பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்,கோனேரிராஜபுரம் அருகில் உள்ள ஊர் சிவனார்அகரம். இத்தலத்து இறைவன் ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி. அம்பாள் திருநாமம் ஸ்ரீஜலமுகள நாயகி.
தீர்த்தம் வருண தீர்த்தம்.
வருண பகவான் பூஜித்த தலம் இது. அருகில் உள்ள கோனேரிராஜபுரம் பூமிக்குரிய தலமாக ஸ்காந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. அதன் எட்டு திக்குகளில் திக்தேவதைகளால் தீர்த்தம் ஏற்படுத்தப்பட்டு , ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்திருமேனிகள் பற்றி ஸ்காந்த புராணத்தில் சிறப்பாக சொல்லப்படுகிறது. இந்த எட்டு கோவில்களிலும் நவக்கிரக சந்நிதி கிடையாது. சிவனார்அகரம் மேற்கு திக்கில் உள்ளதால் சனி பகவானுக்கு விசேஷம் என்றும் சொல்கிறார்கள். பல்லாயிரம் வருஷ தொன்மையான இத்தலத்து இறைவனுக்கு வருண ஜபம் செய்து 108 குடம் சுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தாலே மழை வருஷிக்கும் என்பது இத்தலத்து சிறப்பு. இந்த திருக்கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேக ம் செய்து மழைக்காக கூட்டுப்ரார்த்தனை செய்ய இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அனுக்ரஹத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதமே வெயிலின் உக்கிரம் தாங்க முடியாத நிலையிலும், தண்ணீர் பஞ்சம் இப்போதே பல இடங்களில் ஏற்பட்டுள்ள நிலையிலும் அபாரகருணாமூர்த்தியான பரமேஸ்வரனை தஞ்சமடைந்து மனமுருகி ப்ரார்த்தனை செய்வோம். வருகிற ஏப்ரல் 15ந்தேதி திங்கட்கிழமை சோமவார நன்னாளில் காலை 7மணிக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் மஹன்யாச ஜபத்துடன் ஸ்ரீகாஞ்சி ஆசார்யாளின் அனுக்ரஹத்துடன் சிவனார்அகரம் ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமிக்கு நடைபெற உள்ளது.
இத்தலம் கும்பகோணம் காரைக்கால் மார்க்கத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள தலமாகும். ருத்ராபிஷேகத்தன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி சமேத ஜலமுகள நாயகிக்கு திருக்கல்யாண மஹோத்ஸவம் ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளது.
ஸ்வாமிக்கு குளிரக்குளிர அபிஷேகம் பண்ணி கல்யாண உத்ஸவமும் நடக்கட்டும். ஸ்வாமி தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தருள்வான். ஸ்ரீகாஞ்சி புதுப்பெரியவர் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் இத்தலத்து இறைவனை வேண்டி மழை பொழிந்துள்ளது. நாமும் வேண்டுவோம் வாரீர்!
பதினோரு அபிஷேகம், பதினோரு நெய்வேத்தியம், பதினோரு பேர் ஸ்ரீருத்ரம் பாராயணம், பஞ்சமுகார்ச்சனை என
பொதுநல நோக்குடன் உலகநலன் வேண்டி செய்யப்படும் இந்த புண்ணிய கைங்கர்யத்தில் பங்குபெற விரும்புவோர் கீழ்க்கண்ட இந்துசமயமன்றத்தின் விழா ஒருங்கிணைப்பாளர்களின் கைபேசி எண்களில் அணுகலாம். புலவர் க.ஆத்ரேயசுந்தரராமன்
9789007401, ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் 9080588620, ஸ்ரீ.ராம்ராம்.சுந்தரராமன் 9840588593, ஸ்ரீராம் 7305055553, ஸ்ரீ.சாணுபுத்திரன் 9940199430, ஸ்ரீ.ஸ்ரீகாந்த் 9841745779