07.01.24 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆதம்பாக்கம் சாந்தி நகர் 11 வது தெரு ஸ்ரீமதி.பிருந்தா மாமி அவர்கள் இல்ல வளாகத்திலிருந்து பாண்டுரங்கன் ரகுமாயி திருக்கோவிலை பிரதக்ஷிணமாகச்சுற்றி மஹாபெரியவர் வீதியுலா ஹரஹர சங்கர ஜய கோஷத்துடன் நடைபெற்றது. பிறகு ஸ்ரீமஹாபெரியவர் பூஜா க்ரமப்படி வெகு விமரிசையாக அனுஷ பூஜை நடைபெற்றது. ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனை சமயத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு மஹாபெரியவர் அருட்ப்ரசாதம் வழங்கப்பட்டது.