இருளர் பகுதியில் இந்துசமயமன்றம் சார்பில் இனிய தீபாவளி விழா

26.10.19 சனிக்கிழமை காலை காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஒரத்தூர் இருளர் பகுதியில் இந்துசமயமன்றம் சார்பில் இனிய தீபாவளி விழா ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. ஒரத்தூர் முதல்நிலை ஊராட்சி முக்கிய ப்ரமுகர் திரு.சுபாஷ், திரு.பார்த்தசாரதி, இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், திருமதி.கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா திருமதி.ப்ரபா ஸ்ரீனிவாசன், நமது சமயமன்றத்துடன் இணைந்து சேவை செய்யும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஸ்ரீராம், மக்கள் தொடர்பு அதிகாரி திரு.கண்ணன், மாவட்டத்தலைவர் ஸ்ரீ.ராமச்சந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி தலைவர் ஸ்ரீ.சாயிராம் ஆகியோர் கலந்துகொண்டனர். திரளாக இருளர்மக்கள் கலந்துகொண்டனர்.