பர்வதமலை கிரிவலம்

சித்தர்கள் இன்றளவும் வாசம் புரியும் தலமும், தென்கயிலாயம் என வழங்கப்படுவதுமான திருவண்ணாமலை மாவட்டம், பர்வதமலையை ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் சாக்ஷாத் சிவஸ்வரூபமாகவே கண்டு வணங்கி மார்கழி முதல்நாள் கிரிவலம் வந்தார். அவர் திருவடியையொற்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடந்தோறும் மார்கழி முதல்நாள் பர்வதமலை கிரிவலம் வருகின்றனர். ஸ்ரீமஹாபெரியவர் விக்ரஹஸ்வரூபமாக வருடந்தோறும் கிரிவலம் வருகிறார். அவ்வாறு வலம் வரும் சிவனடியார்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் அன்னதானம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் சார்பில் மலையடிவார கிராமமான கடலாடியில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடமும் மிகச்சிறப்பாக அன்னதானம் மற்றும் ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனை தினமும் இதேநாளில் அமைந்ததால், இனிப்பும் அடியார் பெருமக்களுக்கு வழங்கப்பட்டது. உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
இவண்
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்.