ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் 52வது ஜயந்தி விழாவில் திருஞானசம்பந்த ஸ்வாமிகள் அருளிய கோளறுபதிகம் சிறு பிரதிகள் இந்துசமயமன்றம் சார்பில் வெளியிடப்பட்டு ஸ்வாமிகள் அருளாசியுடன் அனைவருக்கும் ஸ்ரீமடம் ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக சமாஜத்திலும் நேற்று இரவு ஸ்ரீமஹாசிவராத்திரியில் திருக்கோவில்களிலும் அன்பர்களுக்கு வழங்கப்பட்டது. நமது சமயமன்ற மாநில அமைப்பாளராக இருந்து எங்களை வழிநடத்திய செஞ்சொல்மணி புலவர் பு .மா. ஜயசெந்தில்நாதன் ஐயா அவர்கள் இதுபோன்ற சிறுபிரதிகளை அதிகம் வெளியிட்டு மக்கள் அதை படிக்க ஆர்வமேற்படுத்துவார். அவர்கள் அடியொற்றி திரும்பவும் இதுபோன்ற பிரதிகளை இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீபெரியவர் அனுக்ரஹத்துடன் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.