ஸ்ரீசங்கர ஜயந்தி!

பாரத தேசத்தை, சனாதன ஹிந்து தர்மத்தை புனருத்தாரணம் செய்து, வேதநெறி தழைத்தோங்க, அறுவகை சமயம் செழிக்கப்பண்ணியவர். எண்ணற்ற ஸ்லோகங்கள், வேத பாஷ்யம் என 32 வயதில் அவர் செய்தருளிய விஷயங்கள் பிரமிக்கத்தக்கது. சம்புவாகிய பரமேஸ்வரனே இந்த பூலோகத்தில் ஸ்ரீசங்கராச்சார்யராக அவதரித்தருளினார். அவருடைய ஜயந்தி தினத்தில் ஒப்பற்ற ஜகத்குருவாம் ஸ்ரீஆசார்ய சங்கரரை பணிவோம். அவரே அமர்ந்தருளியதும், வாழையடி வாழையாக வந்த குருமரபானதும், மூலாம்னாய ஸர்வக்ஞபீடமான ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்து ஆசார்யஸ்வாமிகளை போற்றி வணங்குவோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்,
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு.