நமது இந்துசமயமன்ற புரவலரும், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளருமான ஸ்ரீ.ஜெயராம ரெட்டியார் அவர்களுக்கு ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ ப்ரசாதம் வழங்கப்பட்டது. மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகமெங்கும் நடைபெறும் ஸ்கந்த சஷ்டி வேல்பூஜை புனித வேல் அலுவலகத்தில் கோமாதா பூஜையுடன் செய்யப்பெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய பொதுச்செயலாளர் டாக்டர்.க.ஸ்ரீராம், ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தான டிரஸ்டி ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட நிர்வாகி ஸ்ரீ.கணேஷ்ஜி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.




