ஸ்வாமிகளை தரிசனம்

இன்று ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளை தரிசனம் செய்து இந்துசமயமன்றம் சார்பில் நடந்துவரும் நிகழ்ச்சிகளை பற்றி சொல்லி ஸ்வாமிகள் அனுக்ரஹப்ரசாதம் பெற்றேன். மேலும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் தமது பீடத்தின் சார்பில் மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீஅனுமன் குரல் பத்திரிகையை ஸ்ரீஸ்வாமிகளுக்கு சமர்ப்பித்து ஆசி பெற்றார்கள். ஸ்ரீபெரியவர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஸ்ரீஅனுமன் குரல் மாதஇதழின் ஆன்மிக சேவைக்கு ஆசீர்வதித்தார்கள். அவ்வமயம் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராம்ஜி அவர்களும் உடனிருந்து ஸ்ரீசரணர்களின் ஆசியை பெற்றார். கூட்டமைப்பின் சேவைகள் இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடத்துடன் இணைந்து செய்ய ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் சந்தோஷத்துடன் ஆசி வழங்கினார்கள்.