காஞ்சி ஸ்ரீமடத்தின் ஏனாத்தூர் சங்கரா கல்லூரி முதல்வரும், இந்துசமயமன்ற அமைப்பாளரும் என் அன்பு சகோதரருமான முனைவர் கலைராம.வெங்கடேசன் – சௌ.கிருஷ்ணவேணி தம்பதியரின் மணிவிழா இன்று காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் வேதோக்தமாக சிறப்பாக நடந்தது. இந்துசமயமன்றம் சார்பில் வாழ்த்துக்களை மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் தெரிவித்ததோடு மணிவிழா வாழ்த்துக்கவிதையையும் அனுப்பினார்.
வாழ்க மணிவிழா தம்பதியினர்!

மணிவிழா வாழ்த்து மடல்
அன்பின் ஆளுமை!
பண்பின் செழுமை!
பழக இனிமை!
பதவியில் நேர்மை!
உதவியில் தாய்மை!
உள்ளத்தில் தூய்மை!
உயர்ந்தோர் கேண்மை!
பாவலர் வாய்மை!
அறிவின் வளமை!
அனுபவச்செம்மை!
உழைப்பில் இளமை!
உன்னதத் தலைமை!
தமிழில் புலமை!
சமயச்சீர்மை!
பார்வையில் எளிமை!
சங்கராகல்லூரி பெருமை!
அருமைச்சகோதரர் முனைவர்.கலைராம.வெங்கடேசன் தம்பதியர் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் பூரண அருளாசியுடன் சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ இந்துசமயமன்றம் சார்பில் மணிவிழா நல்வாழ்த்துக்கள்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
அமைப்பாளர், இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பு
தலைவர், ஸ்ரீநந்திசித்தர் பீடம், திருநந்திகேச்சுரம்.











