ஸ்ரீஸ்கந்த சஷ்டி

ஸ்ரீஸ்கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் ஜ(26.10.25, ஞாயிறு) அம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கடந்த ஐந்து நாட்களாக தமிழகமெங்கும் நடந்துவரும் வேல் வழிபாடு மறைமலைநகர் அகிலபாரத அய்யப்ப சேவா சங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்துசமயமன்றம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அகில பாரத அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விசுவாவசு வருஷத்திய தீபாவளி நன்னாளில் திருக்கோவில் மூல மூர்த்திகளுக்கும் ஆலய அர்ச்சகர்களுக்கும் புது வஸ்த்ரம் வழங்கினோம். தீபாவளியன்று புதுவஸ்த்ரம் சாற்றி அலங்காரம் பண்ணி அனுப்பியுள்ளனர். வஸ்த்ரம் வழங்கிய, உதவிய அன்பர்களுக்கு பகவான் அனுக்ரஹம் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்திக்கிறோம்.
இந்துசமயமன்றம்

நமஸ்காரம்!
ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் இந்த விஸுவாவஸு வருஷ தீபாவளிக்கு வேதபாடசாலைக்கு (பாடசாலை குழந்தைகள், வேத வாத்யார்கள், அவர்கள் மனைவிக்கு) வஸ்த்ரம் சமர்ப்பணம், திருக்கோவில்களுக்கு வஸ்த்ரம், மங்கல பொருட்கள் (ஸ்வாமிக்கு மற்றும் பூஜை பண்ணும் அர்ச்சகர் மற்றும் அவர் மனைவிக்கு), முதியோர் இல்லத்திற்கு திரவிய (அரிசி, வெல்லம், பருப்பு) சமர்ப்பணம் என நல்லபடியாக நல் உள்ளங்களின் ஒத்துழைப்புடன் நிறைவேறியது. இந்த சத்கைங்கர்யத்தில் பங்குகொண்ட அனைத்து பெருமக்களுக்கும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் ஆயுராரோக்ய ஸௌக்யத்தை அருள ப்ரார்த்திக்கிறோம்.
க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்

ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதியின் ஐந்தாவது மேளா

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் ஒரு அங்கமான ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதியின் ஐந்தாவது மேளா 5.10.2025 அன்று சென்னை ராஜகீழ்பாக்கம் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமி வித்யா மந்திரில் மிகப்ரம்மாண்டமாக, மிக கோலாகலமாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் முன்னிலையில் ஸ்ரீஸ்வாமிகளின் ஆக்ஞையின்பேரில் நடத்தப்பெற்றது.
இந்துசமயமன்றம் ஏற்பாட்டில் நடந்த இந்த புனித மேளாவில் ஆயிரம் பேர் வரை க்ருஷ்ணபக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் மகுடமாக ஸ்ரீசரணர்கள் அனுக்ரஹ பாஷணம் வழங்கினார்கள். இந்த நிகழ்வினை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம்.