திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை தீபத்திருவிழா திருக்குடைகள் சமர்ப்பித்தல் யாத்திரை நான்காம் ஆண்டு – தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு
தாம்பரம், மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் பகுதிகளில் மறைமலைநகர் பிராமணர் சங்கம் மற்றும் இந்துசமயமன்றம் மற்றும் பல இந்து ஆன்மீக அமைப்புகள் சார்பில் வரவேற்ற நிகழ்வுகள். நாள். 22.11.25 சனிக்கிழமை

மதுரையில் ஹிந்து சமய மன்ற விழா மிக சிறப்பாக நடைபெற்றது

மதுரையில் ஹிந்து சமய மன்ற விழா மிக சிறப்பாக நடைபெற்றது
திரு சோ சோ மீனாட்சி சுந்தரம்
திரு ராதாகிருஷ்ணன் மாது
திரு சங்கர சீத்தாராமன்
ஆகியோர் திருவிளையாடல் புராணத்தின் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்

முனைவர்.கலைராம.வெங்கடேசன் (முதல்வர், ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சீபுரம்) ஹிந்து சமய மன்றத்தின் பணிகள் குறித்து விளக்கி உரை நிகழ்த்தினார்.

ஸ்ரீ மடம் சார்பில் அனைவருக்கும் மரியாதை வழங்கப்பட்டது

அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது

🙏🙏🙏


ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ ப்ரசாதம் வழங்கப்பட்டது

நமது இந்துசமயமன்ற புரவலரும், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளருமான ஸ்ரீ.ஜெயராம ரெட்டியார் அவர்களுக்கு ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ ப்ரசாதம் வழங்கப்பட்டது. மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகமெங்கும் நடைபெறும் ஸ்கந்த சஷ்டி வேல்பூஜை புனித வேல் அலுவலகத்தில் கோமாதா பூஜையுடன் செய்யப்பெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய பொதுச்செயலாளர் டாக்டர்.க.ஸ்ரீராம், ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தான டிரஸ்டி ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட நிர்வாகி ஸ்ரீ.கணேஷ்ஜி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.