25.12.25 வியாழக்கிழமை மறைமலைநகரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீமங்களகாமாக்ஷி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமி திருக்கல்யாண வைபவம் மற்றும் ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரருக்கு சிவ ஸஹஸ்ரநாம ருத்ராக்ஷ அர்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, இந்துசமயமன்றம், மறைமலைநகர் பிராமணர்கள் சங்கம், வேதபாரதி, அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும், சிவனடியார்களும் கலந்துகொண்டனர்.
சித்தர்கள் இன்றளவும் வாசம் புரியும் தலமும், தென்கயிலாயம் என வழங்கப்படுவதுமான திருவண்ணாமலை மாவட்டம், பர்வதமலையை ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் சாக்ஷாத் சிவஸ்வரூபமாகவே கண்டு வணங்கி மார்கழி முதல்நாள் கிரிவலம் வந்தார். அவர் திருவடியையொற்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடந்தோறும் மார்கழி முதல்நாள் பர்வதமலை கிரிவலம் வருகின்றனர். ஸ்ரீமஹாபெரியவர் விக்ரஹஸ்வரூபமாக வருடந்தோறும் கிரிவலம் வருகிறார். அவ்வாறு வலம் வரும் சிவனடியார்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் அன்னதானம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் சார்பில் மலையடிவார கிராமமான கடலாடியில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடமும் மிகச்சிறப்பாக அன்னதானம் மற்றும் ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனை தினமும் இதேநாளில் அமைந்ததால், இனிப்பும் அடியார் பெருமக்களுக்கு வழங்கப்பட்டது. உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம். இவண் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் கௌரி வெங்கட்ராமன் இந்துசமயமன்றம்.
ையிற் புனிதமான காவேரியின் கிளைநதியான கீர்த்திமான் ஆற்றின் கரையில் உள்ள புண்ய பூமியும், உலகப்புகழ்பெற்ற நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம் (தேவாரப்பெயர் – திருநல்லம்) அருகாமையில் வருணன் பூஜித்த திவ்ய க்ஷேத்ரமும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர், புதுப்பெரியவர் பூஜித்த புனித தலமுமான, கோவில் நகரமான திருக்குடந்தைக்கு அருகிலுள்ள சிவனார் அகரம் ஸ்ரீஜலமுகுளநாயகி அம்பாள் சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக சைவ ஆகம விதிப்படி நடைபெற்றது. சிங்கம் பிள்ளையார் கோவில், கிராமத்து அய்யனார் கோவில் மற்றும் சிவபெருமான் – அம்பாள், பெருமாள் தாயார் என நான்கு கோவில்களுக்கு நடந்த இந்த கும்பாபிஷேக சமயத்தில் நான்கு கருடன்கள் வானில் வலம் வந்தது மெய்சிலிர்க்கவைத்தது.ஸ்ரீபெரியவர்கள் வழங்கிய ஸ்ரீமடத்து ப்ரசாதம், சமயமன்ற சால்வை சர்வசாதகம் சிவாச்சார்யாருக்கும், ஊர் முக்யஸ்தர் ஸ்ரீ.ராஜகோபால் அவர்களுக்கும் வழங்கினோம். இந்துசமயமன்றம் சார்பில் கடந்த நான்கு வருடங்களாக காஞ்சி தற்போதைய பெரியவர்கள் அருளாணைப்படி ஏகாதச ருத்ராபிஷேகம் இங்கே நடைபெறுகிறது. கும்பாபிஷேக வைபவத்தை திறம்பட நடத்திய சிவனாரகரம் ப்ரம்மஸ்ரீ.ராஜகோபால் தம்பதியருக்கும், ஊர் மக்களுக்கும், உதவிசெய்த அனைவருக்கும் இந்துசமயமன்றம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் கௌரி வெங்கட்ராமன் அமைப்பாளர்கள்.