28.08.21 சனிக்கிழமை காஞ்சீபுரம் அருகில் ஓரிருக்கையில் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய வ்ருதம்

🙏🏻பிக்ஷாவந்தனம்🙏🏻

28.08.21 சனிக்கிழமை காஞ்சீபுரம் அருகில் ஓரிருக்கையில் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய வ்ருதம் மேற்கொண்டிருக்கும் மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் சவுதி வாழ் ஸ்ரீகாஞ்சி மடத்தின் பக்தர்கள் அமைப்பான ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா இணைந்து பிக்ஷாவந்தனம் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. ஸ்ரீஆசார்யஸ்வாமிகள் அனைவருக்கும் ஆசிவழங்கியருளினார்கள்.
பக்தர்கள் ஸ்ரீசங்கர பாதுகா பூஜை செய்து தங்கள் குருமூர்த்திக்கு பக்தியுடன் வந்தனம் செய்தனர்.
காலை சிற்றுண்டி, மதியம் அறுசுவை உணவு பக்தர்களுக்கு மணிமண்டபம் போஜனசாலையில் ஸ்ரீமடம் மற்றும் மணிமண்டபம் சார்பில் வழங்கப்பட்டது.