ஸ்ரீப்ராண்ம்பிகை சமேத ஸ்ரீதர்ப்பாரண்யேச்வர ஸ்வாமி திருக்கோவில்

ெங்கல்பட்டு மாவட்டம் கொண்டமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் ஸ்ரீப்ராண்ம்பிகை சமேத ஸ்ரீதர்ப்பாரண்யேச்வர ஸ்வாமி திருக்கோவிலில் சனிப்ரதோஷ காலத்தில் மிகச்சிறப்பாக அபிஷேக ஆராதனைகளும் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. டாக்டர்.சிவசிதம்பரநாதன், ஸ்ரீ.மணிவண்ணன், அனுஷ அமிர்தம் ஸ்ரீ.இராமச்சந்திரன் ஆகியோர் வருகைபுரிந்தனர். திருக்கோவில் பூஜகர் சிவனடியார்.ஸ்ரீ.எல்லப்பன் தம்பதியினர் இத்திருக்கோவிலை சிறப்பாக பராமரித்து வருகின்றனர். இந்துசமயமன்றம் சார்பில் திருக்கோவில் தீபமேற்ற நல்லெண்ணெய் வழங்கப்படுகிறது.

இன்று 04.04.24 வியாழக்கிழமை காஞ்சிபுரம் ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நமது பேரன்பிற்குரிய முனைவர் திரு.கலைராம.வெங்கடேசன் அவர்களை கல்லூரியில் சந்தித்து உரையாடிய மகிழ்ச்சியான தருணம்.
அருகில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜீ மற்றும் அன்பு சகோதரி ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்

இந்துசமயமன்றத்தின் 2023-24 வருஷத்திய முக்கிய நிகழ்வுகள், கல்வி, சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவைப்பணிகள் பற்றிய ஆண்டறிக்கை இன்று (04.04.24) வியாழக்கிழமை ஸ்ரீசரணர்களின் பொற்பதங்கள் பணிந்து சமர்ப்பிக்கப்பட்டது

ஸ்ரீகுருப்யோ நமஹ!
இந்துசமயமன்றத்தின் 2023-24 வருஷத்திய முக்கிய நிகழ்வுகள், கல்வி, சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவைப்பணிகள் பற்றிய ஆண்டறிக்கை இன்று (04.04.24) வியாழக்கிழமை ஸ்ரீசரணர்களின் பொற்பதங்கள் பணிந்து சமர்ப்பிக்கப்பட்டது. இந்துசமயமன்றத்தின் ஒவ்வொரு பணிக்கும் உள்ளிருந்து இயக்கியதுடன், அபார கருணையுடன் ஆசியும் வழங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீபெரியவாளை இந்துசமயமன்றம் பன்முறை பணிந்தேத்துகிறது.
குருவருட்பணியில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்,
மற்றும்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
அமைப்பாளர்கள்
உடன் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி

ஆவஹந்தி ஹோமம்

ஊரப்பாக்கம் ஸ்ரீமதி.சாந்தா மாமி இல்லத்தில் ஆவஹந்தி ஹோமம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்ரஹத்தில் வேதோக்தமாக நடைபெற்றது.

ஸ்ரீதர்மஸாஸ்தா ஜயந்தி விழா

அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஸ்ரீதர்மஸாஸ்தா ஜயந்தி விழா மறைமலைநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.03.24) அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மாலை பல்வேறு ஆன்மீக அமைப்புகள் பங்கேற்ற பேரணி நகர்வலம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் ஆண்டாக நமது இந்துசமயமன்றமும் இதில் பங்கேற்றது. புதிதாக செய்யப்பெற்ற ஹம்ஸ வாகனத்தில் நமது ஸௌலப்ய குருநாதர் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆரோகணித்தபடி பக்தி கோஷத்துடன் நகர்வலம் திரளான பக்தர்களுடன் கயிலாய வாத்யம், சங்கொலியுடன் வந்து அருள்பாலித்தார்.நேர்த்தியாக விழா ஏற்பாடுகளைச்செய்த அய்யப்ப சேவா சங்கத்திற்கு மிக்க நன்றி!

ஸ்ரீஸ்ரீஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களில் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை இந்துசமயமன்றம் சார்பில் சமர்ப்பிக்கிறோம்.

மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் எழுபதாவது பீடாதீச்வரரும், ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 56வது ஜயந்தித்திருநாளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களில் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை இந்துசமயமன்றம் சார்பில் சமர்ப்பிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு.

கோபூஜை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீபாலபெரியவர்கள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் அவதரித்த தண்டலம் கிராமத்தில் ஸ்ரீசங்கரவேதபாடசாலையில் நடைபெற்றுவரும் வேதோக்தமான ஸ்ரீஸ்வாமிகளின் 56வது ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி மூன்றாவது வருஷமாக இன்று 05.03.24 செவ்வாய்கிழமை இந்துசமயமன்றம் சார்பில் தண்டலம் ஊர்பொதுமக்கள் ஆதரவுடன் வெகுசிறப்பாக நடைபெற்ற கோபூஜை சில காட்சிகள்.

அதிருத்ர மஹா யக்ஞம்

ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயாவில் கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் வேதபாரதி சார்பில் நடைபெற்ற அதிருத்ர மஹா யக்ஞத்தில் சுமார் ஆயிரத்து முந்நூறு பேர் ஸ்ரீருத்ர பாராயணம், பதினோரு ஹோம குண்டங்களில் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற்றது. ஸ்ரீநெரூர் ஸ்வாமிகள், ஸ்ரீமுல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் வருகை புரிந்தனர். அச்சமயம் நமது இந்துசமயமன்றம் சார்பில் வேத பண்டிதர்கள் அனைவருக்கும் 1800 மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. கோபூஜைக்கு நமது பெருங்களத்தூர் இந்துசமயமன்ற அமைப்பாளர் திரு.ஷ்யாம் அவர்கள் கோசாலையிலிருந்து பூஜைக்கு ராஜஸ்தான் நாட்டுப்பசுமாடு அழைத்துவந்து பூஜை செய்யப்பட்டது. மற்றும் சுத்தமான பசும்பால் வழங்கப்பட்டது.

ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்

ஜெய் ஸ்ரீராம்!
இன்று 21.01.24 ஞாயிறன்று மாலை அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மிக விமரிசையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு லோகக்ஷேமத்தை ப்ரார்த்தித்து ஸ்ரீஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனூமத் சமேத ஸ்ரீராமபிரானுக்கு விசேஷ பூஜைகள், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், நாமராமாயண பாராயணம், ஸ்ரீராம நாம ஜபம், புஷ்பாஞ்சலி ஆகியவை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக எமது இல்லத்தில் நடைபெற்றது. அவ்வமயம் அயோத்தி ராமர் ஆலயம் அமைய ஸ்ரீகாஞ்சி சங்கரமடம் ஆற்றிய பணிகள், ஸ்ரீஆசார்ய மும்மூர்த்திகளின் அருளாசிகள் ஆகியவை இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் அவர்களால் பக்தியுடன் எடுத்துக்கூறப்பட்டது. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளர் டாக்டர் ஸ்ரீராம், அனுஷ அமிர்தம் நிறுவனர் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், பேராசிரியர் டாக்டர்.சிவ சிதம்பரநாதன் மற்றும் பல அன்பர்கள் கலந்துகொண்டனர். இந்துசமயமன்றம், அனுஷ அமிர்தம், பகுதிவாழ் அன்பர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக சுவையான இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.