ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 130வது ஜெயந்தி பூஜையில் இந்துசமயமன்றம் ஸ்ரீமஹாபெரியவர் உற்சவ விக்ரஹ ஸ்வரூபமாக எழுந்தருளிய காட்சி. ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி.
Category: News
அனுஷத்தின்அருட் கொடை
அனுஷத்தின்
அருட் கொடை.!
(காஞ்சிமகான்)
ஜெயந்தி.!
03.06.2023.
உலகு புகழ்
” விழுப்புரம் “
உயர்ந்த அன்பு
நகரமே.!
கருணைக்கடல்
காஞ்சி மகான்
ஆன்மிகத்தின
சிகரமே..!
விழுப்புரம்எனும்
நகரமே
வீறுபுகழ்
மிக்கது.!
காஞ்சி மகான்
பிறந்த தால
உலகம்
போற்றத்
தக்கது..!
ஆயிரத்தி
எண்ணூத்தி
தொண்ணூத்தி
நான்காம்
ஆண்டிலே…!
ஆன்மிகச்சுடர்
காஞ்சி மகான்
அவதரித்த
நாளுங்க..!
அவருடைய
தரிசனம்
பெற்றோர்
ஆயுட் காலம்
நீளுங்க..!
தமிழ் தெலுங்கு
மலையாளம்
ஆங்கிலம் இந்தி
மராட்டி
சமஸ்கிருதம்
எனப்பல
பதினான்கு
மொழிகள்
தெரியுமே.!
இந்தியாமுழுக்க
நடந்தவர்க்கு
மக்கள் மனம்
புரியுமே..!
காஞ்சி மகாப்
பெரியவா..!
காமாட்சியின்
அம்சமே.!
காஞ்சி மகான்
காலடியை
வணங்கத்
தழைக்கும்
வம்சமே.!
நடமாடும்
தெய்வமாக
நாட்டு மக்கள்
எண்ணுவர்..!
இவ்வாறாக
எண்ணி
அவர்க்குப்
பாத பூஜை
பண்ணுவர்..!
எண்பத்தேழு
ஆண்டுகள்
காம கோடி
பீடத்தின்…!
பீடாதிபதியாய்
இருந்தவர்.!
அகில உலகும்
போற்றி
வணங்கும்
ஆற்றல் மிகு
அருந்தவர்..!
“அருட் கவிஞர் “
கண்ணதாசன்
அர்த்த முள்ள
இந்து மதம்..!
எழுது தற்குக்
காரணமே
காஞ்சிமகான்
தானுங்க..!
காஞ்சி மகான்
உபதேசங்கள்
கொல்லிமலைத்
தேனுங்க..!
ஆயிரத்துத்
தொளாயிரத்து
எழுபத்தி
ரெண்டிலே..!
” இந்து சமய
மன்றம் “என்ற
ஓர்
அமைப்பைத்
தொடங்கினார்.!
திருவிளக்குப்
பூஜை முதல்
தேவாரம் திரு
வாசகம்…!
“தமிழ் வழி
வழி பாடு”
என
மக்கள் கற்று
அடங்கினார்..!
பூமாலை சூட்டி
வணங்கினாலே
பொழுதுக்குள்
வாடும் என..!
பாமாலை சூட்டி
மகிழ்கிறேன்..!
மனம் உருகி
நெகிழ்கிறேன்.!
நூறாண்டுகள்
வாழ்ந்த மகான்
வருக ! வருக !
வருகவே..!
நாடும் வீடும்
நலம்பெற்றுய்ய
நல்லாசி
தருகவே..!
அடியேன்
விசூர்மாணிக்கம்
03.06.2023.
கவிதை:1739.
ஸ்ரீ
காஞ்சிமகான்
மலரடிகள்
போற்றி!போற்றி!

இந்துசமயமன்றம் சார்பில் அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறோம்!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருவடித்தாமரைகளில் மஹா அனுஷ நன்னாளில் (03.06.23,சனிக்கிழமை) ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான, இந்துசமயமன்றம் சார்பில் அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறோம்!
என்றும் குரு சேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைஇராம வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன்
மற்றும் கிளை அமைப்பாளர்களும், சமயமன்ற அன்பர்களும்

ஸ்ரீமடம் முகாமில் நடந்த விழாவில் ஆசி வழங்கி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி அனுக்ரஹித்தருளினார்கள்
ஸ்ரீகுருப்யோ நம!
எனது இளைய மகன் சிரஞ்சீவி.K.R.ஷ்யாம் பிளஸ்2 அரசுத்தேர்வில் அதிகமதிப்பெண்கள் 591/600 பெற்றும் நான்கு முக்கிய பாடங்களிலும் 100/100 பெற்றும் தேர்ச்சியடைந்ததற்காக ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் திருப்பதி ஸ்ரீமடம் முகாமில் நடந்த விழாவில் ஆசி வழங்கி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி அனுக்ரஹித்தருளினார்கள். ஸ்ரீசரணர்களின் பொன்னார் திருவடிக்கமலங்களில் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.எனது மகனுக்கு நல்ல கல்வியைத்தந்த ஸ்ரீசங்கரா கல்விக்குழும நிர்வாகிகள்,தாளாளர், ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி முதல்வர், ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
இந்துசமயமன்றம்.

நேற்று 25.04.23 செவ்வாய்கிழமை மறைமலைநகரில் ஸ்ரீசங்கர ஜயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யரின் அவதார நன்னாள்
ஸ்ரீகுருப்யோ நம! ஜகத்குரு ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யரின் அவதார நன்னாளில் ஸ்ரீசரணர்களின் பொற்பாத கமலங்களில் மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஹ்ருதயபூர்வமான பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது. ஸ்ரீஆசார்யாளின் வேத தர்ம வழி நடப்போம்! சனாதன ஹிந்து தர்மம் காப்போம்!

இனிய தமிழ் புத்தாண்டு (சோபகிருது) நல்வாழ்த்துக்கள்!
ஸ்ரீமஹாபெரியவர் திருவுருவப்படத்தினில் எழுந்தருளி நகர்வலம்
09.04.23 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஸ்ரீதர்மசாஸ்தா ஜெயந்தியையொட்டி நடைபெற்ற பஞ்சபூத மஹாயக்ஞம் மற்றும் ஆன்மீகப்பேரணியில் இந்துசமயமன்றமும் பங்கேற்றது. அலங்கரிக்கப்பட்ட வேனில் ஸ்ரீமஹாபெரியவர் திருவுருவப்படத்தினில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் மிகச்சிறப்பாக இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமான முறையில் நடத்தினார்கள்.இஸ்கான, அனுஷ அமிர்தம், பிரம்மா குமாரிகள் சங்கம் ஆகியோர் ஊர்வலமாக வர திருக்கயிலாய வாத்தியம் மற்றும் செண்டை வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க, ஸ்ரீமுனீஸ்வரஸ்வாமி, ஸ்ரீதர்மஸாஸ்தா, ஸ்ரீமஹாபெரியவர், ஸ்ரீசிவலிங்கேஸ்வரர் தனித்தனி ரதத்தில் நகர்வலம் வந்து அருள்பாலித்தனர்.