ையிற் புனிதமான காவேரியின் கிளைநதியான கீர்த்திமான் ஆற்றின் கரையில் உள்ள புண்ய பூமியும்,
உலகப்புகழ்பெற்ற நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம் (தேவாரப்பெயர் – திருநல்லம்) அருகாமையில்
வருணன் பூஜித்த திவ்ய க்ஷேத்ரமும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர், புதுப்பெரியவர் பூஜித்த புனித தலமுமான, கோவில் நகரமான திருக்குடந்தைக்கு அருகிலுள்ள சிவனார் அகரம் ஸ்ரீஜலமுகுளநாயகி அம்பாள் சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக சைவ ஆகம விதிப்படி நடைபெற்றது. சிங்கம் பிள்ளையார் கோவில், கிராமத்து அய்யனார் கோவில் மற்றும் சிவபெருமான் – அம்பாள், பெருமாள் தாயார் என நான்கு கோவில்களுக்கு நடந்த இந்த கும்பாபிஷேக சமயத்தில் நான்கு கருடன்கள் வானில் வலம் வந்தது மெய்சிலிர்க்கவைத்தது.ஸ்ரீபெரியவர்கள் வழங்கிய ஸ்ரீமடத்து ப்ரசாதம், சமயமன்ற சால்வை சர்வசாதகம் சிவாச்சார்யாருக்கும், ஊர் முக்யஸ்தர் ஸ்ரீ.ராஜகோபால் அவர்களுக்கும் வழங்கினோம். இந்துசமயமன்றம் சார்பில் கடந்த நான்கு வருடங்களாக காஞ்சி தற்போதைய பெரியவர்கள் அருளாணைப்படி ஏகாதச ருத்ராபிஷேகம் இங்கே நடைபெறுகிறது. கும்பாபிஷேக வைபவத்தை திறம்பட நடத்திய சிவனாரகரம் ப்ரம்மஸ்ரீ.ராஜகோபால் தம்பதியருக்கும், ஊர் மக்களுக்கும், உதவிசெய்த அனைவருக்கும் இந்துசமயமன்றம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்.


















































