ஸ்ரீகுருப்யோ நம! ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஆசார்ய ஸ்வாமிகள், புதுப்பெரியவர் என அன்புடன் பக்தர்களால் அழைக்கப்பட்டவர், ஸ்ரீமஹாபெரியவரின் அன்பு சீடர், ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களின் ஜயந்திவிழா ஸ்ரீமடத்தின் பக்தர்களால் பரம பக்தியுடன் இன்று கொண்டாடப்படுகிறது. பாரததேசமெங்கும் வலம் வந்து சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மஹான். வேதபாடசாலைகள், கல்விக்கூடங்கள், கோசாலைகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், ஜனகல்யாண் ஜனஜாக்ரண் அமைப்பு என பலவற்றை தோற்றுவித்து மக்கள் துயர் நீக்கிய மஹாகுரு.ஸ்ரீமஹாபெரியவரின் திருவுள்ளப்பாங்கின்வண்ணம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் அமைப்பை உருவாக்கி போஷித்து அதன் தூய தொண்டுகளுக்கு அருளாசி வழங்கி வந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் சார்பில் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறோம். புலவர் க ஆத்ரேய சுந்தரராமன். கௌரி வெங்கட்ராமன். அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
காஞ்சிகாமகோடி பீடம். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிஸ்வாமிகள் ஜெயந்தி விழா.! 💐🙏🏻💐 * நடமாடும் தெய்வமே..! உம்மைப் போற்றி உய்வமே..! 💐 “இருள்நீக்கி” என்ற ஊரில் இறையருளால் பிறந்தவா..? 💐 காஞ்சி காம கோடி பீடம் கண்டு வாழ்வில் சிறந்தவா..! 💐 “ஜனகல்யாண்” கண்டவா..! மனதில் உறுதி கொண்டவா..! 💐 மாதவம் மிக்க ஞானியே..! கரையேற்றும் தோணியே..! 💐 மாந்தர் மன “இருள் நீக்கி” மாண்புறவே வாழ்ந்தவா..! 💐 என்றும் ஈசன் நாமம் சொல்லி இறைநினைவில் ஆழ்ந்தவா..! 💐 சநாதன இந்து தர்மம்..! தழைத்தோங்கச் செய்தவா..! 💐 எளிமையாக என்றும்வாழ்ந்து பாசமழை பெய்தவா..! 💐 திரு மடத்துள் வருவோர்க் கெல்லாம்..! 💐 திருவமுதும் செஞ் சொல் வாக்கும் தப்பாமல் அளித்தவா..! 💐 மழலையர்க்கும் நீதிக்கதைகள் சொல்லிச் சொல்லிக் களித்தவா..!. 💐 சிரித்தமுகத்தின் சொந்தமே.! சிரிப்பைப்பார்க்க வந்தமே..! 💐 ஜாதி மத பேதமற்ற சமத்துவத்தைக் கண்டவா…! 💐 ஏழையர்க்கும் அன்பு காட்டி மனதைக் கொள்ளை கொண்டவா..! 💐 நீறுமணக்கும் நெற்றியுடன் அருட்காட்சி தந்தவா..! 💐 ஜனங்களோடு ஜனங்களாக நடை போட்டு வந்தவா..! 💐 காஞ்சி காம கோடி பீடம் தன்னை அலங் கரித்தவா..! 💐 உலகம் போறப் போக்கைக்கண்டு உள்ளுக் குள்ளே சிரித்தவா..! 💐 மனித நேயத் தோடு வாழ்ந்த மாதவமே..! பணிகிறோம்.! 💐 உமது பாத மலர் எடுத்து எங்கள் சிரசில் அணிகிறோம்..! 💐 ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவடி சரணம் சரணமே..! 💐 எங்கட் கருள வரணும்!வரணும்! என்றும் சரணம் சரணமே.! 💐🙏🏻💐 அடியேன் விசூர்மாணிக்கம் 18.07.2021. தினம்ஒருகவிதை எண்.1002. 🦚 ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர..! 🙏🏻
அன்பர்கள் அனைவருக்கும் வியாச பூர்ணிமா வாழ்த்துக்கள்! பாரம்பரிய ஸ்ரீஜகத்குரு பீடமான மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதீச்வரர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் பொற்பதங்களில் அனந்தகோடி நமஸ்காரங்களை குரு பூர்ணிமா புனித நன்னாளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் சமர்ப்பிக்கிறோம். புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், வெங்கட்ராமன் மற்றும் கௌரி வெங்கட்ராமன்
திங்கட் கிழமை தோறும் இணைய வழியாக நடைபெறும் தொடர் உபன்யாசம் – பகுதி : 2
Monday, June 14 · 6:00 – 7:00pm Google Meet joining info Video call link: https://meet.google.com/bjj-qwjs-kmz Youtube link: https://www.youtube.com/channel/UCsLLZtA7LfTcNoCgN47l4yw
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடத்தின் சார்பில் வெளிவரும் மாத இதழ் “சென்னை ஜன கல்யாண் செய்தி மடல்” ஆசிரியரும், சென்னை மாவட்ட ஜன கல்யாண் இயக்கத்தின் தலைவரும் ஆன ஶ்ரீமான் கே.நாகராஜன் அவர்கள் 12.6 2021 ஞாயிறு பிற்பகல் காலமானார் என்ற நம்பமுடியாத, மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய, செய்தியை மிகுந்த துயரத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவரது மறைவு ஆன்மீக வட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! இந்துசமயமன்றம் சார்பில் ஆற்றிவரும் சேவைகளை ஆர்வமுடன் கேட்டு உடனுக்குடன் செய்தி மடலில் வெளியிட்டும், ஆலோசகராகவும் திகழ்ந்த அன்னாரது ஆத்மா ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் திருவடிகளில் அமைதிபெற இந்துசமயமன்றம் சார்பில் ப்ரார்த்திக்கிறோம். இந்துசமயமன்ற அன்பர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் , அவரவர் இருக்கும் இடத்திலேயே,நமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துவோம். அவரது மோக்ஷம் நோக்கிய பயண பாதைக்கு வெளிச்சம் காட்டும் வகையில் நாம் ஒவ்வொருவரும் அருகாமையில் இருக்கும் ஆலயத்திலே அல்லது அவரவர் வீட்டு பூஜை அறையில் உள்ள கடவுள்/குரு படத்தின் முன்போ பிரார்த்தனை செய்து கொள்வோம். இயன்றவர்கள் “மோக்ஷ தீபம்” ஏற்றுவோமாக! தாங்கொணாத்துயரத்துடன், புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் கௌரி வெங்கட்ராமன் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றம்.
நமது அருமைத்தம்பிகளின் சமூக சேவையில் நம் சமயமன்றம் சார்பிலும் அரிசி வழங்கப்பட்டது. உயிரை பணயம் வைத்து தொண்டாற்றும் இவர்களின் சேவை வாழ்க! ஸ்வாமி விவேகானந்தர் சொன்னது போல வீர இளைஞர்களின் சக்தி பெருகட்டும்! பாரத அன்னை தன் பழைய பொலிவுடன் மீண்டு வரட்டும்!
ஸ்ரீபெரியவா லீலைகளை நாம் கேட்கிறோம். ஆனால் ஸ்ரீமஹாபெரியவர் கூறிய உபதேசங்களை நாம் எந்தளவிற்கு பின்பற்றுகிறோம் என்று பார்த்தால் மிகப்பெரிய கேள்விக்குறியே மனதில் எழுகிறது. சொற்பொழிவு திலகம் ஸ்ரீமதி.லலிதா வெங்கடேசன் அவர்கள் ஸ்ரீமஹாபெரியவரின் உபதேசங்களை விளக்குகிறார். இந்துசமயமன்றம் சார்பில் இந்த யுடியூப் நிகழ்ச்சி வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதேசமயம் அன்பர்கள் ஸ்ரீஆசார்யாள் உபதேசங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டுகிறோம்.