சனாதன தர்மத்தை வாழவைக்க வாராது வந்த மாமணியாம் நமது ஜகத்குரு!
அயோத்தி ராமபிரான் ஆலய புனர்நிர்மாணப்பணியில் ஸ்ரீஸ்வாமிகளின் கைங்கர்யம் அதிகம்!
மஹாஸ்வாமிகள் ஆசியுடன் இந்துசமயமன்றத்தை போஷித்து வளர்த்த பெருந்தகை!
பட்டிதொட்டியெலாம் சென்று தனது இன்முகம் காட்டி அனைவருக்கும் ஆசி வழங்கிய வள்ளல்!
ஆதிசங்கரருக்குப்பிறகு பாரத தேசமெங்கும் பவனிவந்து ஹிந்து தர்மத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஜகத்குரு!
எண்ணிலடங்கா திருப்பணிகள்! வேதபாடசாலைகள், கல்விச்சாலைகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், ஏழை எளியோருக்காய் உதவிய உத்தம ஞானி!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் மூன்றாவது ஆராதனை தினத்தில் (26.03.2021) இந்துசமயமன்றம் தனது ஹ்ருதயபூர்வ அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்வாமிகளின் அருட்கமலமலரடிகளில் சமர்ப்பிக்கிறது.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்
மற்றும்
இந்துசமயமன்ற அன்பர்கள்
Category: News
அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்

அத்வைத ஞான மூர்த்தி ஆனந்த மோன மூர்த்தி இச் சகம் வாழ வாழும்
ஈடிலா எம் குரு மூர்த்தி
உத்திராடம் உதித்த மூர்த்தி
ஊழ்வினை அகற்றும் மூர்த்தி
எத்தகு பிழை செய்தாலும் ஏழையேமை ஏற்கும் மூர்த்தி
ஒப்பிலா உண்மை அன்பு
ஓங்கிட அருளும் மூர்த்தி
ஒள டதம் போலும் நின்று
அகிலத்தைக் காக்கும் மூர்த்தி
இஃது எம் தோத்திரப் பா
ஏற்றெமை ஆண்டருள்க!
பூஜ்ய ஶ்ரீ சுவாமிகளின் 53வது ஜெயந்தி நன்னாளில் அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்.
வ.ச. ஶ்ரீகாந்த் – இந்து சமய மன்றம்

கோபூஜை தண்டலம் 05.03.2021
இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஜயந்தி விழா – கோபூஜை
தண்டலம் (ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலம்)
05.03.2021 வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலத்தில் கோபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. ஊர்மக்கள் அவரவர் வீட்டு பசுமாடு கன்றுக்குட்டியுடன் அழைத்துவந்தனர். இருபத்தோரு பசுமாடுகளுக்கு தண்டலம் வேதபாடசாலை வளாகத்தில் பூஜை வேதவிற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பெற்றது. ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி பசுக்களின் மஹிமைகள் பற்றிய விளக்கினார். ஸ்ரீ.ஸ்ரீதர்ஜி அவர்கள் ஆலோசனைகளுடனும், கிராமப்பொதுமக்களின் மிகச்சிறப்பான ஒத்துழைப்புடனும் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடனும் கோபூஜைை விசேஷமாக நடந்தேறியது.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீ.வெங்கட்ராமன் (ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா)ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.


இந்துசமயமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை
இந்துசமயமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை 28.01.2021 வியாழக்கிழமை தைப்பூசத்திருநாளில் பெருங்குடி ஸ்ரீநாகமணி அடிகளார் ஜீவசமாதி திருக்கோவில் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நூற்று ஐம்பது மகளிர் பங்கேற்ற திருவிளக்கு பூஜையினை இந்துசமயமன்ற அன்பர் திருமதி. சுஜாதா காமேஸ்வரன் அவர்கள் நடத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நமது இந்துசமயமன்றம் சார்பில் ஆடிட்டர் திரு. ஸ்ரீகாந்த்ஜி பங்கேற்று பசு பாதுகாப்பு மற்றும் கோமாதா சிறப்புகளை கூறி சொற்பொழிவு ஆற்றினார்கள். சித்தாந்தா பவுண்டேஷன் சார்பில் திருக்கோவில்களில் நூலகம் அமைக்கும் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்து முதல் முயற்சியாக இந்த கோவிலில் அதற்கான அறிமுக உரையாற்றி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை திரு.கிருஷ்ணன் அவர்கள் மக்களுக்கு வழங்கினார் .திருக்கோவில் நிர்வாகி திருமதி. மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பூஜைக்காக சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். பகுதிவாழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வருகைபுரிந்தனர். இந்த திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இதேநாள் காலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திருக்கோவில் வளாகத்தில் ஆரம்பப்பள்ளி மற்றும் கோசாலை நடைபெற்று வருகிறது.
ஜெயஜெய சங்கர!
ஹரஹர சங்கர!
திருவிளக்கு பூஜை
நேற்று 22.01.21 தை வெள்ளிக்கிழமை வேளச்சேரி ஸ்ரீகணபதி சச்சிதானந்தா் ஹாலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் ஸ்ரீபெரியவா ஆக்ஞைப்படி இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் கலந்துகொண்டார். சாக்தஸ்ரீ காசி வாத்தியார் அவர்கள் மிகவும் க்ரமமாக பூஜையை நடத்தி வைத்தார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவா அனுஷ பூஜை சமிதி இந்த பூஜைக்கு மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
காளை விடும் போட்டி
மனமார்ந்த வாழ்த்துக்கள்! கடலாடி இந்துசமயமன்றம் காளை விடும் போட்டியிலும் கலக்குகிறது. சகோதரர் ஜெயவேலுவிற்கும் அவர்தம் மைந்தருக்கும் வாழ்த்துக்கள்!

இந்துசமயமன்றம் சார்பில் இருளர் பகுதியில் இனிய பொங்கல் விழா
ஸ்ரீகுருப்யோ நம!
11.01.2021 திங்கட்கிழமை ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் உள்ள ஒரத்தூர் ஊராட்சி இருளர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்துசமயமன்றம் சார்பில் மூன்றாவது ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அந்த பகுதி வினாயகர் மற்றும் ஸ்ரீகன்னியம்மன் கோவிலில் புது வஸ்த்ரம் சாற்றி உலகநலன் வேண்டி வழிபாடு செய்யப்பட்டது.ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபாவின் ஆதரவில் செல்வி ராஜேஸ்வரி (US), அருமை சகோதரர் திரு.ராஜ்மோகன் அவர்களின் பங்களிப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமிகு.N.D.சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஒரத்தூர் ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில், இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் தலைமையில் ஸ்ரீநந்தீஸ்வரர் உழவாரப்பணிமன்றம் சிவஸ்ரீ.மணிவண்ணன், ஸ்ரீநந்தி சித்தர் பீடம் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், சமயமன்ற அன்பர்கள் ஸ்ரீ.சந்திரநாத்மிஸ்ரா,ஸ்ரீ.சாயிராம், ஸ்ரீ.ஸ்ரீதர், ஆகியோர் பங்கேற்றனர்.இருளர் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களுடன் புது போர்வைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெற உதவிய சமயமன்ற மாநில அமைப்பாளர் திருமதி.கௌரி வெங்கட்ராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை நேற்று பக்தியுடன் கொண்டாடப்பட்ட அடுத்தநாள் இந்த நல்ல நிகழ்ச்சி அதன் தொடர்ச்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஹரஹர சங்கர! ஜயஜய சங்கர!
தைப்பூசம் திருவிழாவிற்கு அரசு விடுமுறை

தைப்பூசம் திருவிழாவிற்கு அரசு விடுமுறை அறிவித்தமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்துசமயமன்றம் தெரிவிக்கிறது.

புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.
இந்த கடலாடி கிராமத்தில் இந்துசமயமன்றம் கிளை செயல்படுகிறது. வருடாவருடம் அன்னதானம் மார்கழி ஒன்றாம் தேதி சமயமன்றம் சார்பில் செய்யப்படுகிறது.
நேற்று மார்கழி ஒன்றாம்நாள் கடலாடி இந்துசமயமன்றம் அமைப்பாளர் திரு ஜெயவேலு அவர்கள் வழக்கம்போல் பர்வதமலை ஈசனின் பிரசாதப்பை சமயமன்றம் சார்பில் வழங்கினார். புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.