ராதா மாதவஸ்வாமி, நமசங்கீர்த்தனத்துடன் நகர்வலக்காட்சிகள்.

02.04.22 சனிக்கிழமை யுகாதி பண்டிகை மறைமலைநகரில் ஸ்ரீமஹாபெரியவர், ராதா மாதவஸ்வாமி, நமசங்கீர்த்தனத்துடன் நகர்வலக்காட்சிகள்.

இருளர் பகுதியில் அன்னதானம்

இன்று (23.3.22, புதன் கிழமை காலை)அனுஷ அமிர்தம் சார்பில் களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் அன்னதானம் (லட்டு, வடை, வெஜிடபுள் புலாவ், ரெய்தா) ஸ்ரீமஹாபெரியவர் அருளாசியுடன் நடைபெற்றது.

அனுஷநக்ஷத்ர சிறப்பு பூஜை

இன்று மாலை (23.03.22, புதன்கிழமை மாலை) மறைமலைநகர் இந்துசமயமன்றம் சார்பில் அமைப்பாளர் ஸ்ரீ.ப்ரகாஷ் அவர்கள் இல்லத்தில் ஸ்ரீமஹாபெரியவரின் அவதாரத்திருநக்ஷத்ரமாகிய அனுஷநக்ஷத்ர சிறப்பு பூஜை, வேதபாராயணம், ஸ்ரீலலிதா, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், மகளிர் கும்மிப்பாட்டு, அஷ்டோத்ர பூஜை என மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது.

சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் நான்காவது வருஷ ஆராதனை

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் நான்காவது வருஷ ஆராதனை நாளில் (15.03.22, செவ்வாய்கிழமை) ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிக்கமலங்களில் ஹ்ருதயபூர்வமான பக்தியுடன் அனேக கோடி வந்தனங்களுடன் நமஸ்கரிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்,
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்,
மற்றும் கிளைஅமைப்பாளர்கள்,அன்பர்கள்.

நான்காவது வருஷ ஆராதனையை

இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடம் ஸ்ரீபுதுப்பெரியவர் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் நான்காவது வருஷ ஆராதனையை முன்னிட்டு களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் அன்னதானம் (ஜாங்கிரி, கீரை வடை, வெஜிடபிள் பிரிஞ்சி சாதம்) வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில் அன்பு சகோதரர் ஸ்ரீ.ஸ்ரீராம்ஜி (செங்கை மாவட்ட செயலாளர்,விஸ்வ ஹிந்து பரிஷத்)அவர்கள் கலந்துகொண்டு அன்னதானம் உபயமாக வழங்கினார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜெயந்தி

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு இந்துசமயமன்றம் சார்பில் இன்று 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் அன்னதானம் நடைபெற்றது. ரவாகேசரி,ஜாங்கிரி,கீரைவடை,சாம்பார் சாதம், உருளைபட்டாணி பொரியல், தண்ணீர் பாட்டில் ஆகியவை ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஆதரவில் அளிக்கப்பட்டது.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஜயந்தி சிறப்பு கவிதை புலவர்.விசூர் மாணிக்கனார்.

ஸ்ரீவிஜயேந்திர
சரஸ்வதி
சுவாமிகள்
ஜெயந்திவிழா!காஞ்சிசங்கரமடம்
27.02.2022.
💐🙏🏻💐
*
ஆயிரத்துத்
தொளாயிரத்து
அறுபத்து
ஒன்பது..!
💐
மார்ச் பதின்
மூன்று தாங்க
இறைவன்
இவரைத்
தந்தது..!
💐
ஸ்ரீ சங்கர
விஜயேந்திரர்
புண்ணிய
பூமிக்கி
வந்தது..!
💐
காஞ்சிகாமாட்சி
அம்மன் தாங்க
நமக்குஇவரைத்
தந்தது..!
💐
திருவள்ளூரு
பக்கந்தாங்க.!
“தண்டலம்”
பொறந்த
ஊருங்க..‌!
💐
போளூர் பாட
சாலையிலே
இவர் படிச்சார்
பாருங்க.!
💐
வேதவிற்பன்னர்
தந்தையாகிய
கிருஷ்ணமூர்த்தி
சாஸ்திரி..!
💐
அவர்களுமே
அங்குதாங்க
வேலையும்
பார்த்தாருங்க.!
வேதங்களை
அவரிடமே
கற்றுத்
தேர்ந்தார்
பாருங்க..!
இவருக்கீடு
யாருங்க..?
💐
இறைவன்இட்ட
இயற் பெயரு
சங்கர
நாராயணன்..!
💐
அனைவருமே
இவர் பெயரைச்
செய்யும்
பாராயணன்.!
💐
ஆயிரத்துத்
தொளாயிரத்து
எண்பத்து
மூன்றுங்க..!
💐
மே
இருபத்து
ஒன்பது..!
பட்ட மேற்ற
சான்றுங்க..!
💐
காஞ்சிபுரம்
சங்கர மடம்
எழுபதாவது
பீடங்க..!
💐
நம்மை எல்லாம்
கரை யேற்ற
வந்த உயர்
ஓடங்க..!
💐
காஞ்சி மகாப்
பெரியவரும்..!
ஜெயேந்திரரும்
வாழ்ந்தது…!
💐
நமசிவாய
மந்திரத்தில்
தினமும் மூழ்கி
ஆழ்ந்தது..!
💐
பட்டம் ஏற்ற
உடனேயே
ஸ்ரீ சகத்குரு
சந்திர…!
💐
சேகர
சரஸ்வதி
சுவாமியைப்
பற்றிப்
பத்து
ஸ்லோகம்
அடங்கிய…!
💐
“தசகம்”ஒன்று
பாடினார்…!
மக்கள்மகிழ்ந்து
ஆடினார்..!
💐
பஞ்சாப்
இமாச்சலம்
அசாம் ஒரிசா
மேற்குவங்கம்..!
ஆகிய..!
💐
ஊர்களுக்குச்
சென்றாரு..!
ஐம்புலன்
ஆசையை
வென்றாரு..!
💐
ஸ்ரீ ஜெயேந்திர
சுவாமிகளோடு
நேப்பாளமும்
சென்றாரு..!
வாழ்க மக்கள்
என்றாரு..!
💐
ஸ்ரீ விஜயேந்திர
சரஸ்வதி
சுவாமிகள்
பதமலரைப்
பணிவமே..!
💐
அவர்திருவடித்
தாமரைகளை
நம்தலையில்
அணிவமே..!
💐
வாழ்க ! வாழ்க !
விஜயேந்திரர்
வாழ்க ! வாழ்க !
வாழ்கவே.!
💐
கயிலை வாழும்
கண்ணுதலான்
அருள் நலங்கள்
சூழ்கவே..!
💐🙏🏻💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
27.02.2022
தினம்ஒருகவிதை
எண்.1255.
ஸ்ரீ
விஜயேந்திர
சரஸ்வதிஸ்வாமிகள்
பதமலர்
போற்றி போற்றி
💐🙏🏻💐