
களிவந்தப்பட்டு இருளர் காலனி பகுதியில் அன்னதானம்
பணிகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
ஸ்ரீகுருப்யோ நம!
23.02.2022 புதன்கிழமை
இந்துசமயமன்றத்தின் பணிகள் பற்றிய அறிக்கை ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளிடம் அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமனால் சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீபெரியவர்கள் சமயமன்ற பணிகள் பற்றிய விஷயங்களை பார்வையிட்டருளி ஆசி வழங்கினார்கள். வியாசர்பாடி கிளை சென்னபுரி இந்துசமயமன்ற கிளை சார்பில் உருவாக்கிய ஸ்ரீஆதிசங்கரர்(ஸ்ரீமத் அத்வைதம்), ஸ்ரீமஹாபெரியவர் (ஸ்ரீமத் சனாதனம்), ஸ்ரீபுதுப்பெரியவர்(ஸ்ரீமத் லோகஹிதம்) பஞ்சலோக விக்ரஹங்களை இந்துசமயமன்ற மிகமூத்த அமைப்பாளர் ஸ்ரீ.ஹரிஹரன்ஜி சமயமன்றக்குழுவினருடன் ஸ்ரீபெரியவர்களிடம் சமர்ப்பித்தார். ஸ்ரீஸ்வாமிகள் மகிழ்வுடன் ஆசிவழங்கியருளினார்கள்.
இந்துசமயமன்றம், இந்து இறைபணிமன்றம் சார்பில் மாசிமகத்தன்று ஸ்ரீசமுத்ரராஜனுக்கு மஹாஹாரத்தி
“வீடுதோறும் திருமுறை, வீதிதோறும் தமிழ்மறை”
சிவாய நம!
“வீடுதோறும் திருமுறை, வீதிதோறும் தமிழ்மறை”
14.02.2022 திங்கட்கிழமை மறைமலைநகர் அருகில் கடம்பூர் சிவபெருமான் திருக்கோவிலில் ப்ரதோஷத்தன்று மாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணிவரை உலகநலன் வேண்டி “பலன்தரும் பாராயணப்பதிகங்கள்” திருமுறை ஓதும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அன்னதானமும் நடைபெறும்.
அனைவரும் வருக! அரனருள் பெறுக!
இந்துசமயமன்றம்
திருவாசக முற்றோதுதல் குழு
ஸ்ரீமஹாபெரியவா இல்லம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பக்தஜனசபா சார்பில் அன்புடன் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் திருச்செந்துறை ஸ்ரீமானேந்தியவல்லி உடனுறை ஸ்ரீசந்திரசேகரஸ்வாமி திருக்கோவிலில் சேலம் ஸ்ரீமஹாபெரியவா இல்லம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பக்தஜனசபா சார்பில் அன்புடன் வழங்கப்பட்ட மஹாபெரியவா ப்ரசாதம் இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணீய பாராயணம்
இந்துசமயமன்ற சூளைமேடு கிளை அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் இன்று அவிட்டபூஜை சிறப்பாக உலகநலன் வேண்டி நடைபெற்றது. பஞ்சலோக விக்ரஹ ஸ்வரூபமாகஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமஹாபெரியவர்களும் ஸ்ரீபுதுப்பெரியவர்களும் மும்மூர்த்திகளாய் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே சூளைமேடு இந்துசமயமன்ற கிளை சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மும்முறை இப்பெரியவர்களின் அருள்முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஏகதின நாராயணீய பாராயணம் நடைபெற்றுவருகிறது.

அவிட்டபூஜை
இந்துசமயமன்ற சூளைமேடு கிளை அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் இன்று அவிட்டபூஜை சிறப்பாக உலகநலன் வேண்டி நடைபெற்றது. பஞ்சலோக விக்ரஹ ஸ்வரூபமாகஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமஹாபெரியவர்களும் ஸ்ரீபுதுப்பெரியவர்களும் மும்மூர்த்திகளாய் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே சூளைமேடு இந்துசமயமன்ற கிளை சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மும்முறை இப்பெரியவர்களின் அருள்முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஏகதின நாராயணீய பாராயணம் நடைபெற்றுவருகிறது.












