ருத்ராக்ஷ லிங்கத்திற்கு விசேஷ பூஜை சிவநாம ஜப வேள்வி நடைபெற உள்ளது

சிவாய நம! சிவபூஜை செய்வது மிகவும் புண்ணியம். சிவநாமத்தை சொல்வது பெரிய தவம். அதனால்தான் மணிவாசகஸ்வாமிகள்”யானேயோ தவம் செய்தேன் சிவாயநமவெனப்பெற்றேன்” என்கிறார். ஒரு ஜீவனின் ரத்தினமாக பிரகாசிப்பது சிவநாமமே என்கிறார் அப்பைய தீட்சிதர். தென்னாடுடைய பெருமான் எந்நாட்டவர்க்கும் இறையாம் பரம்பொருளை சிவநாமத்தைச்சொல்லி சிவபூஜை செய்வது புனிதமான சிவ கைங்கர்யம். வில்வ இலைகளால் லிங்கமூர்த்தியை அர்ச்சித்தல் விசேஷம். சிவபெருமானின் அருவுருவ மூர்த்தமான லிங்க மூர்த்தி சுயம்புவாகவும், கல்லாலும், மண், மரம், நவரத்தின, பாண, ஸ்படிக, ருத்ராக்ஷ என பலவிதங்களில் பூஜை செய்யப்படுகிறார். ருத்ராக்ஷம் சிவபெருமானின் நெற்றிக்கண் சம்பந்தப்பட்டதால் அதற்கு பவித்ரம் அதிகம். முழுவதும் ருத்ராக்ஷங்களால் செய்யப்பட்ட லிங்கமூர்த்தியை வில்வம் மற்றும் புஷ்பங்கள் கொண்டு புனிதமான சிவக்ஷேத்ரத்தில் பூஜித்தல் நமக்கு பலமடங்கு புண்ணியத்தை தரும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, அழகிய கிராமத்தில் இயற்கை சூழல் கெடாத அற்புதமான பூஜைக்கேற்ற சூழலில் அம்பாள் மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீசந்திரமௌளீச்வரஸ்வாமி திருக்கோவில் திண்டிவனம் அருகில் கீழ்பசார் எனும் கிராமத்தில் மிக அதிக தெய்வ சாந்நித்யத்துடன் விளங்குகிறது. அக்கோவிலில் வரும் நிறைமதி நாளன்று (பௌர்ணமி 24.09.18 திங்கட்கிழமை ) அன்று மாலை ஆறுமணியளவில் ருத்ராக்ஷ லிங்கத்திற்கு விசேஷ பூஜை சிவநாம ஜப வேள்வி நடைபெற உள்ளது. திங்கள் சந்திரனுக்கானது. அத்தலத்தில் உறையும் ஸ்வாமி சந்த்ரமௌளீச்வரர். (சந்த்ரனை தலையில் சூடிய பெருமான் ). சந்த்ரன் குளிர்ச்சியை தருபவர். அங்குள்ள அன்னையின் திருநாமம் மரகதாம்பிகை . மரகதம் என்றால் பச்சை- பசுமை. இதுவும் குளிர்ச்சி மற்றும் சந்தோஷம், செல்வ வளம். இன்னொரு விசேஷம் இக்கோவில் சுக்ர பரிகார ஸ்தலம். செல்வம் தரும் பெருமானை பௌர்ணமி நாளில் பொன்மாலை வேளையில் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் ஆசியுடன் வலம்வரும் ஸ்ரீருத்ராக்ஷ சிவமூர்த்திக்கு பூஜையுடன் சிவநாம ஜப வேள்வி கூட்டுப்ரார்த்தனை சிறப்பாக நடைபெற உள்ளது. ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பெறும் இந்த வேள்வி உலக நலனை முன்னிட்டும், இத்திருக்கோவில் திருப்பணிகள் விரைவில் பூர்த்தியாகி திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப்பெருவிழா விரைவில் நடைபெறவுமான நோக்கத்திலானது. ஏற்கனவே கடந்த மாதம் இதே அமைப்புகள் சார்பில் ஊர்பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 54 கோபூஜை மிகச்சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சிவநாம ஜபவேள்விக்கு கீழ்பசார் ஊர்பொதுமக்கள் சார்பிலும், இந்துசமயமன்றம் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பிலும் வருக வருக என இருகரம் கூப்பி அழைக்கிறோம்.
சிவநாமத்தை ஓதி சிவபூஜை செய்திடுவோம்! வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்றிடுவோம்!
மேலும் விவரங்களுக்கு : திரு. வெங்கடபதி-9962513308, புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் – 9789007401, திரு. ஸ்ரீராம் – 7305055553, ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்-9080588620.

சிவநாம ஜப வேள்வி வருகிற 23.09.18 ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில்

சிவாய நம! இந்துசமயமன்றம் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் சிவநாம ஜப வேள்வி வருகிற 23.09.18 ஞாயிறு அன்று மாலை 4 மணியளவில் திரு.ஸ்ரீராம் அவர்கள் இல்லத்தில் ( 32. தாமரை அபார்ட்மென்ட், இரண்டாவது தெரு, கேப்டன் சசிகுமார் நகர், பெருங்களத்தூர், சென்னை -63)
ஸ்ரீபரமேச்வர க்ருபையுடன், ஸ்ரீகாஞ்சி ஆசார்யாள் அனுக்ரஹத்துடன் நடைபெற உள்ளது. ஓம்காரத்துடன் சிவபுராணம் பாராயணம், சிவநாம ஜபம், ருத்ராக்ஷ சிவனாருக்கு விசேஷ பூஜை நடைபெறும். “யச்சிவோ நாம ரூபாப்யாம் யா தேவீ சர்வமங்களா” என்கிற வாக்யத்திற்கேற்ப சிவநாம ஜபம் செய்து சர்வமங்களத்தையும் அனைவரும் அடைய வேண்டி, திரு அருணாச்சல சிவனாரிடமும், ஸ்ரீஆசார்யாளிடம் ப்ரார்த்தித்து ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அதிஷ்டானத்தில் வைத்து கொணரப்பெற்ற ஸ்ரீருத்ராக்ஷ லிங்கத்திற்கு, உலகநலனை வேண்டி செய்யப்பட உள்ள இப்புனித சிவபூஜையில் அனைவரும் பங்கேற்கலாம். அவரவர் பகுதிகளில் இல்லங்களிலோ அல்லது ஆலயங்களிலோ இந்த சிவலிங்கத்தை கொண்டுவந்து வைத்து பூஜிக்கலாம். சாதி வேறுபாடின்றி அனைவரும் பூஜிக்கலாம். ருத்ராக்ஷ சிவலிங்கம் மிகவும் பவித்ரமானது. ஹ்ருதய சுத்தியுடன் சுத்தமான இடத்தில் எவரும் பூஜிக்கலாம். பூஜையில் பங்கு கொள்ள அல்லது தங்கள் பகுதிகளில் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட கைபேசி எண்களில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 9789007401/
7299272442 / 9080588620.

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “

சாதுர்மாஸ்ய வ்ரதம் அனுஷ்டித்து வரும் ஸ்ரீபிலாஸ்பூர் ஸ்வாமிகள் திருமுன்னர் நமது இந்துசமயமன்றம்

இன்று (18.09.18) செவ்வாய்க்கிழமை ஆதம்பாக்கத்தில் சாதுர்மாஸ்ய வ்ரதம் அனுஷ்டித்து வரும் ஸ்ரீபிலாஸ்பூர் ஸ்வாமிகள் திருமுன்னர் நமது இந்துசமயமன்றம் சார்பில் ஒரு சத்சங்கம் நிகழ்ச்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் நடைபெற்றது. ஸ்ரீமதி.சாந்தாபாலசுப்ரமணியன் குழுவினர் பஜனைப்பாடல்கள் பாடினர். ஸ்ரீமதி.பார்வதிமோகன் அவர்கள் இறைவணக்கம் பாட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஸ்ரீகாந்த்ஜி பாரதமாதா பூஜை ப்ரார்த்தனை செய்தார். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம் அவர்கள் ஸ்வாமிகளுக்கு இந்து அமைப்புகள் சார்பில் மரியாதை செய்தார். புலவர் இராமச்சந்திரன் அவர்கள் ஸ்வாமிகளுக்கு வரவேற்பு பத்திரம் வாசித்தளித்தார். ஸ்ரீபிலாஸ்பூர் ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம் (அருளாசியுரை) நிகழ்த்தினார்கள்.அதில் நம்முடைய சனாதன தர்மத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் ஹிந்து சம்பிரதாயங்களின் மேன்மையையும் சிறப்பாக வலியுறுத்தினார்கள். இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

வெள்ளி கவசம் சாற்றும் நிகழ்ச்சி

டிபன்ஸ்காலனியில் ஸ்ரீவரசித்தி வினாயகர் கோவிலில் இன்று நடைபெற்ற வெள்ளி கவசம் சாற்றும் நிகழ்ச்சியில் அடியேன். ஹோமத்தில் ஸ்ரீவினாயகர் திருக்குடை மற்றும் மூஷிகத்தில் எழுந்தருளிய திருக்காட்சி. மஹாவரப்ரசாதியான இந்த வினாயகர் திருக்கோவிலில் ஸ்ரீபர்வதவர்தனி உடனுறை ஸ்ரீராமநாதேஸ்வரர் திருச்சந்நியியில் திருவாசகம் முற்றோதுதல் கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் சிவனருளால் சிறப்பாக நமது இந்துசமய மன்றம் மற்றும் ஸ்ரீநந்தி சித்தர் பீடம் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் சார்பில் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீசக்ர மஹாமேரு பீடாதிபதி பிலாஸ்பூர் ஸ்வாமிகள் வருகைதந்தார்கள்

இன்று (28.7.18) மாலை ஸ்ரீசக்ர மஹாமேரு பீடாதிபதி பிலாஸ்பூர் ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் ஆதம்பாக்கம் இந்துசமயமன்றம் கிளை ஸ்ரீவெங்கட்ராமன் அவர்கள் இல்லத்தில் ஸ்வாமிகளை தரிசனம் செய்துகொண்டு நமது சமய மன்ற பணிகளுக்கு ஆசீர்வாதம் பெற்றேன். அவ்வமயம் ப்ரம்மஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்திரிகள் வருகைதந்தார்கள்.

குரு பூர்ணிமா – வந்தே ஸ்ரீவிஜயேந்த்ர ஜகத்குரும்!

வியாச பூர்ணிமா எனும் குரு பூர்ணிமா நன்னாளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் அருட்திருவடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்களை காணிக்கையாக சமர்ப்பிக்கிறோம்.

இந்துசமயமன்றம்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன் அவர்கள் ஸ்ரீராமாயண உபன்யாசம்

26.07.18 அன்று மாலை மாடம்பாக்கம் ஸ்ரீபெரியவா இல்லத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன் அவர்கள் ஸ்ரீராமாயண உபன்யாசம். அடியேனும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராமும் ஸ்ரீபிரகாஷ் அண்ணா அழைப்பின்பேரில் கலந்துகொண்டோம். நமது சமய மன்றம் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி சமய மன்ற வெளியீடான சுந்தர காண்டம் கைப்பிரதி அனைவருக்கும் விநியோகித்தோம். உபன்யாசம் மிகச்சிறப்பாக இருந்தது.

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கைங்கர்யத்தில் தங்களை வாழ்நாள் முழுவதும் ஈடுபடுத்திக்கொண்ட அணுக்கத்தொண்டர்களுக்கு மூன்றாவது நாளில் ஸ்ரீமஹாபெரியவர் மஹோத்சவத்தில் சிறப்பு செய்யப்பட்டது. ஸ்ரீவேதபுரி சாஸ்திரிகள், ஸ்ரீ சிவராமக்ருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீகுமரேச சாஸ்திரிகள், ஸ்ரீபட்டாபி அவர்கள், ஸ்ரீதியாகு தாத்தா என பலரையும் கௌரவித்து பணிந்து மகிழ்ந்தோம். ஸ்ரீவேதபுரி சாஸ்திரிகள் மற்றும் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் திருக்கோவில் ஸ்ரீசெல்லா விஸ்வநாத சாஸ்திரிகள் ஸ்ரீஆசார்யாள் மஹிமைகளைசொல்லக்கேட்டது பரமானந்தம்.

 

ஆடி செவ்வாய் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்

நமது இந்துசமயமன்றம் சார்பில் ஊரப்பாக்கம் எம்ஜி நகர் 1 ஸ்ரீசக்தி வினாயகர் திருக்கோவிலில் அருள்மிகு சர்வமங்களா துர்காம்பிகா சந்நிதியில் நேற்று மாலை (24.07.18) ஆடி செவ்வாய் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், அம்பாளுக்கு த்ரிசதி அர்ச்சனை ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் நடைபெற்றது. இந்துசமயமன்றத்தின் நோக்கங்களை அடியேன் விளக்கினேன். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராம் கலந்துகொண்டார். ஊரப்பாக்கம் இந்துசமயமன்றம் கிளை தலைவர் திருமதி.பார்வதிமோகன் அவர்களும் திருமதி சுதா கண்ணன் அவர்களும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். திருக்கோவில் நிர்வாகத்தினர் திரு.வேணுகோபால் அவர்கள் மற்றும் திரு.முத்துசாமி அவர்கள் மற்றும் அங்கத்தினர்கள் மிகவும் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கினர். ஸ்ரீசர்வமங்களா பஜன் மண்டலி திருமதி.சாந்தா பாலசுப்பிரமணியம் அவர்கள் குழுவினர் பக்திப்பாடல்கள் பாடினர்.ஸ்ரீமடத்தில் இருந்து ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் வழங்கிய ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் படம், குங்குமப்பிரசாதம், மற்றும் அன்னப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்த திருக்கோவிலில் இந்துசமயமன்றம் நிகழ்ச்சிகள் நடத்தவும் திருக்கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்.

 

 

 

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் மூன்றாவது நாள்

நங்கநல்லூர் ஸ்ரீராமமந்திரத்தில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் மூன்றாவது நாள் காலை (22.07.18) ஞாயிறு அன்று ஒன்பது கன்னிகைகளுக்கு நவதுர்கைகளாக, நவசக்திகளாக வரித்து நவ கன்யா பூஜை நடைபெற்றது. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் காக்கும் கடவுளாக நம்மை ரக்ஷிக்கும் நம் குருநாதர் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கமலமலரடிகளில் ஷோடசோபசார பூஜை நடைபெற்றது.

டாக்டர் கணேஷ் இன்னிசை முதல்நாள், ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீபாலப்பெரியவாளின் அற்புதமான திட்டம்” சம்ப்ரதாயா” திருப்பதி குழந்தைகளின் இன்னிசை ஸ்ரீமதி.லக்ஷ்மி மாந்தாதா அவர்கள் மேற்பார்வையில் இரண்டாம் நாள்.