ஒரத்தூர் இருளர் குடியிருப்பில் 9.1.20 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் பொங்கல் விழாவை முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா இரண்டாவது ஆண்டாக மிகச்சீரும் சிறப்புமாக ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் விக்ரகஸ்வரூபியாக எழுந்தருள, ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ரதத்தை ஊர்மக்கள் அனைவரும் வணங்கி வரவேற்று ஸ்ரீபாதுகைகளுக்கு புஷ்பாஞ்சலி செய்தனர்.இருளர் குடும்பங்களுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் நல்ல தரமான புத்தாடைகள் வழங்கப்பட்டது. முக்கிய விருந்தினராக செல்வி.இராஜேஸ்வரி(US), சமயமன்ற அமைப்பாளர்கள் புலவர். க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன், நந்திவரம் கூடுவாஞ்சேரி அமைப்பாளர். ஸ்ரீமதி.தாரா தேவராஜ், திருக்கோவில் தீபமேற்ற எண்ணெய் வழங்குதல் பொறுப்பாளர் இராமச்சந்திரன்,ஊர் முக்கியஸ்தர்கள் திரு.கோதண்டராமன், திரு.சுபாஷ், ஊராட்சி மன்ற செயலாளர் திரு. பார்த்தசாரதி மற்றும் பல அன்பர்கள் கலந்துகொண்டனர். இரவு இனிப்புகள் மற்றும் சுவையான உணவு அனைவருக்கும் திரு விஜயகுமார் & திருமதி. சாந்தி விஜயகுமார் தம்பதியினர் வழங்கினர். இதேபோல் அருகில் உள்ள காவனூர் திருத்துவெளி கிராம இருளர் குடியிருப்பு பகுதியில் இருளர் குடும்பங்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு, இரவு உணவு வழங்கப்பட்டது.திருத்துவெளி ஊர் முக்கியஸ்தர்கள் திரு. வெங்கடேசன் தலைமையில் ஸ்ரீகாஞ்சி பெரியவர் எழுந்தருளியுள்ள ரதத்தை வரவேற்று வணங்கினர்.