இந்துசமயமன்றம் ஆதரவுடன் ஊர் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டுடன் 07.10.23 புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தையடுத்த தண்டலம் (ஸ்ரீபாலப்பெரியவர் அவதாரக்ஷேத்ரம்) கிராமத்தில் இரண்டாவது ஆண்டாக ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிக்கு வேதபாராயணத்துடன் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பாகவதர்களின் வீதி பஜனை, குழந்தைகள் கோலாட்டம், கயிலாய வாத்தியம், மங்கள வாத்தியத்துடன் ஸ்வாமி திருவீதி ஊர்வலம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தண்டலத்தில் ஸ்ரீமடம் சார்பில் மருத்துவச்சேவை, கல்விச்சேவை என பல்நோக்கு வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
Category: News
அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
காலமெல்லாம் க்ருஷ்ணபக்தியிலேயே மூழ்கின மஹான். பல்லாயிரக்கணக்கான பக்தர்களை சனாதன வழியில் திருப்பியவர். எண்ணற்ற கைங்கர்யங்கள் பண்ணினவர். பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் மறைவு சனாதன ஹிந்து மதத்திற்கு பேரிழப்பு ஆகும். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் அன்னாரின் திருவடிகளில் பக்தியுடன் மலரஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது. புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், முனைவர்.கலை.ராம.வெங்கடேசன், கௌரி வெங்கட்ராமன் மாநில அமைப்பாளர்கள். இந்துசமயமன்றம்.
ஸ்ரீமஹாபெரியவா மஹோத்ஸவம் இரண்டாம்நாள் நிகழ்வுகள்
ஸ்ரீமஹாபெரியவா மஹோத்ஸவம் 2023 – ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா முதல்நாள் நிகழ்வுகள்
02.08.23 ஸ்ரீமந்நாராயணீய பாராயண வைபவம் – வஞ்சுவாஞ்சேரி ஸ்ரீகிருஷ்ணன் கோவில்
ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரராகிய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி நன்னாளில் இந்துசமயமன்றம் மலரஞ்சலிகளை பக்தியுடன் ஸ்ரீஸ்வாமிகளின் கமல மலரடிகளில் சமர்ப்பிக்கிறது.
இவண்,
மாநில அமைப்பாளர்கள் மற்றும் அன்பர்கள்.