ஸ்ரீகுருப்யோ நம!
11.01.2021 திங்கட்கிழமை ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் உள்ள ஒரத்தூர் ஊராட்சி இருளர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்துசமயமன்றம் சார்பில் மூன்றாவது ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அந்த பகுதி வினாயகர் மற்றும் ஸ்ரீகன்னியம்மன் கோவிலில் புது வஸ்த்ரம் சாற்றி உலகநலன் வேண்டி வழிபாடு செய்யப்பட்டது.ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபாவின் ஆதரவில் செல்வி ராஜேஸ்வரி (US), அருமை சகோதரர் திரு.ராஜ்மோகன் அவர்களின் பங்களிப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமிகு.N.D.சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஒரத்தூர் ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில், இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் தலைமையில் ஸ்ரீநந்தீஸ்வரர் உழவாரப்பணிமன்றம் சிவஸ்ரீ.மணிவண்ணன், ஸ்ரீநந்தி சித்தர் பீடம் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், சமயமன்ற அன்பர்கள் ஸ்ரீ.சந்திரநாத்மிஸ்ரா,ஸ்ரீ.சாயிராம், ஸ்ரீ.ஸ்ரீதர், ஆகியோர் பங்கேற்றனர்.இருளர் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களுடன் புது போர்வைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெற உதவிய சமயமன்ற மாநில அமைப்பாளர் திருமதி.கௌரி வெங்கட்ராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை நேற்று பக்தியுடன் கொண்டாடப்பட்ட அடுத்தநாள் இந்த நல்ல நிகழ்ச்சி அதன் தொடர்ச்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஹரஹர சங்கர! ஜயஜய சங்கர!
Category: News
தைப்பூசம் திருவிழாவிற்கு அரசு விடுமுறை

தைப்பூசம் திருவிழாவிற்கு அரசு விடுமுறை அறிவித்தமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்துசமயமன்றம் தெரிவிக்கிறது.

புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.
இந்த கடலாடி கிராமத்தில் இந்துசமயமன்றம் கிளை செயல்படுகிறது. வருடாவருடம் அன்னதானம் மார்கழி ஒன்றாம் தேதி சமயமன்றம் சார்பில் செய்யப்படுகிறது.
நேற்று மார்கழி ஒன்றாம்நாள் கடலாடி இந்துசமயமன்றம் அமைப்பாளர் திரு ஜெயவேலு அவர்கள் வழக்கம்போல் பர்வதமலை ஈசனின் பிரசாதப்பை சமயமன்றம் சார்பில் வழங்கினார். புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.
ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்

பழம்பெரும் சைவ ஆதீனங்களில் ஒன்றும், தொண்டைமண்டல சைவ ஞானபீடமுமாகிய தொண்டைமண்டல ஆதீனத்தின் 232வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள் முக்தி அடைந்தார்கள். தமிழிலும் சைவத்திலும் மிகுந்த புலமையும் ஞானமும் பெற்ற ஞானாசிரியராக விளங்கிய ஸ்ரீஸ்வாமிகளின் தொண்டு போற்றி வணங்குதற்குரியது. ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிமலர்களில் இந்துசமயமன்றம் சார்பில் அஞ்சலிகளை சமர்ப்பணம் செய்கிறோம். இவண், மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள். இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு.
நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம்
நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம் இன்று 29.11.2020 ஏற்றப்பட்டது. இந்துசமயமன்றம் சார்பில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.இனிப்பு வழங்கப்பட்டது.
அனுஷ மூர்த்திக்கு நாட்டியாஞ்சலி!
இந்துசமயமன்றம் சார்பில் இருளர் மக்களுடன் இனிய தீபாவளிப்பண்டிகை.
13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஒரத்தூர் கிராமத்தில் இருளர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் சவுதி ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா உதவியுடன் தீபாவளிப்பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு இனிப்பு மற்றும் பொங்கலுக்கு புத்தாடையுடன் அறுசுவை உணவு கடந்த மூன்று வருடங்களாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்த பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட நிகழ்ச்சியில் ஒரத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் திருமதி.கற்பகம் சுந்தர், திரு.N.D.சுந்தர், திரு.சுபாஷ், மற்றும் ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி, இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், சமயமன்ற அன்பர்கள் திரு. சாயிராம், திரு.சந்த்ரநாத் மிஸ்ரா, ஸ்ரீநந்தி சித்தர் பீடம் திரு.க.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீகாமகோடி குரு கானாம்ருதம்!
கேரள மாநிலம் எடநீர் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில், கேரள மாநிலம் எடநீர் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கேரள மாநிலம், எடநீர் மடாதிபதியாக இருந்த கேசவானந்த பாரதி சுவாமிகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சித்தி அடைந்தார். இளமைக் காலத்திலிருந்தே அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
கேசவானந்த பாரதி சுவாமிகள் எடநீர் மடத்துக்கும், தேசிய அளவில் மக்களுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும், பங்களிப்புகளும் மகத்தானவை என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார். கேசவானந்த பாரதி சுவாமிகள் தனது வாழ்நாளின்போதே ஜயராம மஞ்சத்தாயாவை வாரிசாக நியமிக்க விரும்பியதையும், அவருக்கு சந்நியாச ஆஸ்ரம உபதேசம் வழங்குவதற்கான நாளைத் தேர்ந்தெடுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். தனது பக்தர்களிடமும், ஜயராம மஞ்சத்தாயாவிடமும் தனக்கு ஒருவேளை எதிர்பாராத சூழ்நிலை ஏற்படுமானால் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளை அணுகி, அவரது ஆசி மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று, சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வைத்து, எடநீர் மடத்தின் வாரிசாக நியமிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, எடநீர் மடத்தின் நிர்வாகிகள், பக்தர்களுடன் ஜயராம மஞ்சத்தாயாவும் காஞ்சிபுரம் வந்து பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தனர். எடநீர் மடத்தின் வாரிசாகவும், ஜயராம மஞ்சத்தாயாவுக்கு சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வேண்டும் என்ற விருப்பக் கடிதங்களை வழங்கினர்.
காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நல்லாசிகளுடன் ஓரிக்கையில் பதவியேற்றார்
ஸ்வர்ணஹள்ளி ஸ்வாமிகளுக்கு ஸந்யாசம் ஆஸ்ரம ஸ்வீகாரம்
ஸ்வர்ணஹள்ளி ஸ்வாமிகளுக்கு ஸந்யாசம் ஆஸ்ரம ஸ்வீகாரம். ஸ்ரீ பெரியவாள் மந்த்ரோபதேசம் செய்தபோது எடுத்த படம்.
எந்த ஒரு பாரம்பரிய மடங்களுக்கும் குருசிஷ்ய பரம்பரை விச்சின்னம் ஏற்பட்டால் புனருத்தாரணம் செய்து வைப்பது ஸ்ரீ ஆதிசங்கரரின் சிம்ஹாஸனமான காமகோடி பீடம் ஸ்ரீ பெரியவாள் தான். இவர்கள் ஆதிசங்கரரின் நேர் பரம்பரை பரம்பரையாக வருபவர்கள். அனைவருக்கும் குருபீடம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர
காலடி சங்கர காமகோடி சங்கர










































