இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீசித்தாந்தா பவுண்டேஷன் சார்பில் 01.08.2020 சனிக்கிழமை அன்று மறைமலைநகர் நகராட்சி களிவந்தப்பட்டு கிராமத்தில் முககவசம் வழங்கப்பட்டது. ஸ்ரீசித்தாந்தா பவுண்டேஷன் ஸ்ரீகிருஷ்ணன்,இந்துசமயமன்றம் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீநந்தீஸ்வரர் உழவாரப்பணிக்குழு ஸ்ரீ.மணிவண்ணன், ஸ்ரீநந்தி சித்தர் பீடம் ஸ்ரீராமச்சந்திரன், ஊர்பிரமுகர் ஸ்ரீ.கருணாகரன், ஸ்ரீஆலய தரிசனம் யுடியூப் சேனல் ஸ்ரீ.சரவணன் ஆகியோர் வருகைபுரிந்தனர்.
Category: News


இன்று ஸ்ரீவரலக்ஷ்மி நோன்பு!

மஹாலக்ஷ்மி அளவற்ற செல்வத்தின் அதிதேவதை. அவளுடைய அருள் கடைக்கண் பார்வை இருந்தாலும் போதும் ஒரு மனிதன் வாழ்வில் வளம்பெற.உலகைக்காக்கும் ஸ்ரீமன்நாராயணனின் திருமார்பில் நித்யவாஸம் செய்யும் லக்ஷ்மியை வணங்கி அவள் அருளோடு ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, தீபாவளி என வரிசையாக அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம். கொரோனா நோய்தொற்றுக்காலத்தில் உலகமே அவதியுறும் தற்காலத்தில் ஆரோக்கிய லக்ஷ்மியாய், இல்லத்து கஷ்டங்களை நீக்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மியாய், எதையும் எதிர்கொள்ள தைரிய லக்ஷ்மியாய் நாம் வேண்டியதை வரமாய் நல்கும் வரலக்ஷ்மியாய் நம் இல்லத்திற்கு வருகைபுரிய மாலவன் மார்பில் வாழும் மங்கல கமலச்செல்வியை வேண்டுவோம். நல்லதே நடக்கும்.நம் முயற்சிகள் யாவற்றிலும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் துணை நிற்க ப்ரார்த்திப்போம்.
அனைத்து அன்பர்களுக்கும் ஸ்ரீவரலக்ஷ்மி நோன்பு தின வாழ்த்துக்கள்!
இந்துசமயமன்றம்
(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு)
நோய் எதிர்ப்பு சக்தி சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் இந்துசமயமன்றம் இணைந்து ஆதனூர் பகுதியில் ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முககவசம் வழங்கும் நிகழ்ச்சி
ஸ்ரீசித்தாந்தா பவுண்டேஷன் ஆதரவில் இந்துசமயமன்றம் சார்பில் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் முன்னிலையில் நமது சமயமன்ற அன்பர் திரு.கலைச்செல்வன் அவர்கள்,(ஜெய் கேஸ் ஏஜென்சி உரிமையாளர்) கேஸ் விநியோகம் செய்யும் பணியாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், மகளிருக்கு வழங்கினார். உடன் திருக்கோவில் எண்ணெய் வழங்குதல் பொறுப்பாளர் திரு. க.இராமச்சந்திரன் உடன் இருந்தார். முககவசத்தின் பயன்பாடு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
அன்பர்களே!
வரும் வியாழன் ஆடி மாதப் பிறப்பு, கிருத்திகை. சுப்ரமண்ய ஸ்வாமிக்கு உகந்த நாள்.அன்று காலை அவரவர் வீட்டில், இந்து சமய புனித நூல்களில் ஒன்றும், பலகோடி மக்களால் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்யப்படுவதுமான
தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசத்தை முக நூலில் இழிவு படுத்தி பிரச்சாரம்செய்த தேச விரோத நாத்திகர்களின் அராஜக எண்ணம் மாற வேண்டி, ஹிந்து விரோத சக்திகளின் இத்தகைய இழிசெயல்கள் நடைபெறாவண்ணம் ஸ்ரீஆறுமுகப்பெருமானை வேண்டி கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யுமாறு தமிழகத் தின் அனைத்து பக்தர்களையும் ஆன்மிக சமயமன்ற அன்பர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்துசமயமன்றம் சார்பில் சித்தாந்தா பவுண்டேஷன் ஆதரவில் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி.
13.7.20 திங்கட்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஒரத்தூர் ஊராட்சி மற்றும் நீலமங்கலம் ஊராட்சி பகுதிகளில் நூறுநாள் வேலைதிட்டப்பணியாளர்கள் மற்றும் இருளர் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் முககவசத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கி அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது. தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்களுக்கும் முககவசம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சித்தாந்தா பவுண்டேஷன் ஸ்ரீ.கிருஷ்ணன், இந்துசமயமன்றம் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
குரு பூர்ணிமா
வேதம் தொகுத்து அளித்த ஸ்ரீவேதவியாசரை பணிவோம்!
சனாதன இந்து தர்மத்தை புனருத்தாரணம் செய்த ஸ்ரீசங்கரரை பணிவோம்!
நடமாடும் தெய்வமாய் விளங்கி அருள்பாலித்த ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் திருவடி பணிவோம்!
தர்ம ஸ்தாபனத்திற்காக பாரதம் முழுவதும் வலம்வந்து மக்களின் துயர்துடைக்க கல்வி, மருத்துவ சேவைகளை ஏற்படுத்திய ஸ்ரீகாஞ்சி புதுப்பெரியவரை வணங்குவோம்!
ஸ்ரீகாஞ்சி காமகோடி குரு பரம்பரையின் பெருமையை உலகிற்குணர்த்தி வேதம்,ஸாஸ்த்ரம்,அனுஷ்டானம் இவைகளை வலியுறுத்தி ஒப்பற்ற ஆசார்யராய் ஞானபாஸ்கரராய் ப்ரகாசிக்கும் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகளை நமஸ்கரிப்போம்!
குருபூர்ணிமா நன்னாளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்து சமய மன்றம் குருபீடத்தின் மஹனீயர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறது.
ஸ்ரீதுர்காம்பிகையை வணங்கி ப்ரார்த்திப்போம்

துர்கா – துர்கதி நாசினி என்று கூறுவோம். அனைத்துவிதமான இடர்களையும் துக்கங்களையும் போக்குபவள் துர்க்கை. இந்த கலி காலத்தில் துர்க்கை கண்கண்ட தெய்வமாவாள். துர்காம்பிகையை ஆராதித்தால் நம்மைச்சூழ்ந்துள்ள கேடுகளை அகற்றி நமக்கு இன்பத்தை வாரிவழங்குவாள். துர்கையை ஆராதிக்க செவ்வாய் கிழமையும் அஸ்வினி நக்ஷத்திரமும் ஒன்றாக அமைந்துள்ள 16.6.20 அன்று மிக விசேஷமாகும் என காஞ்சி ஸ்ரீஆசார்யாள் அருளியுள்ளார் . அன்று அழகான தமிழில் துர்க்கை துதிப்பாடல்களை பாடி வழிபடலாம். ஸ்ரீதுர்க்கைச்சித்தர் அருளிய பாடல்களை மனமுருக பாடுங்கள். வடமொழியில் ஸ்ரீதுர்கா சப்தச்லோகி என்று ஏழு ஸ்லோகங்கள் உள்ளன. தேவி மஹாத்மியத்தின் சாரம் அது. சண்டீ ஹோமத்தில் ப்ரயோகிக்கப்படும் அந்த ஸ்லோகங்களை உச்சரிப்பு பிழை இல்லாமல் சொல்லலாம். ஸ்ரீதுர்க்கைச்சித்தர் ஸ்வாமிகள் அனைவரும் பயன்பெற தன்னுடைய அனுபூதியில் கண்ட அம்பாளை அதியற்புதமாக தோத்திரங்களில் பக்திச்சுவை சொட்டச்சொட்ட பாடி அருளியுள்ளார். கொடுமையான கொரோனா நோய் அரக்கனின் பிடியிலிருந்து விடுபட ஸ்ரீதுர்காம்பிகையை வணங்கி ப்ரார்த்திப்போம். இந்துசமயமன்றம்.
இந்துசமயமன்றம் சார்பில் வேண்டுகோள்!
ஸ்ரீகுருப்யோ நம!
கேரளாவில் வெடிவைத்து கொடூரமாக மனிதத்தன்மையற்ற மிருகங்களால் கொல்லப்பட்ட கர்ப்பிணி யானைத்தாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 7.6.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.01 க்கு நமது இல்லத்தில் உள்ள வினாயகப்பெருமான் திருமுன்னர் விளக்கேற்றி அந்த ஜீவனுக்கு மாத்திரமல்ல இதுபோன்று கொல்லப்படும் எண்ணற்ற வாயில்லா ஜீவன்களின் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திப்போம். வினாயகர் அகவல் படித்து இந்த பரிதாப ஜீவன்களுக்காக வேண்டுவோம்.



































