நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிராமக்கோவில்கள் புனருத்தாரண திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வடகல் கிராமத்தில் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.

இந்து சேவை மற்றும் ஆன்மீக கண்காட்சி

இந்து சேவை மற்றும் ஆன்மீக கண்காட்சி சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி வளாகத்தில் கடந்த ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை 2020 வருடத்திய கண்காட்சி நடைபெற்றது. அதில் நமது இந்துசமயமன்றம் சார்பில் சேவை விளக்க அரங்கு இடம்பெற்றது. பல முக்கிய இந்து தலைவர்கள் மற்றும் ஆன்மீக குருமார்கள் வருகைபுரிந்தனர்.

இந்து ஆன்மீக கண்காட்சி

ஸ்ரீகுருப்யோ நம! பதினொன்றாவது இந்து ஆன்மீக கண்காட்சி சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி வளாகத்தில் இன்று மாதாஸ்ரீ அமிர்தானந்தமயி அவர்களால் துவக்கப்பெற்று வருகிற பிப்ரவரி 3ந்தேதி வரை நடைபெறும். நமது இந்துசமயமன்றத்தின் அரங்கு கண்காட்சி வளாகத்தில் A2 பகுதியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் குழுவில் அமைந்துள்ளது. காலை 10மணிக்கு ஆரம்பிக்கும் கண்காட்சி இரவு 8.30மணிவரை திறந்திருக்கும். இந்து கலாச்சார பண்பாட்டு சேவைகளை பிரதிபலிக்கும் பல்வேறு அரங்குகள் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா சேவைகளை விளக்கும் வண்ணம் பல பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அவசியம் குடும்ப சகிதம் வந்து பார்வையிட ப்ரார்த்திக்கிறோம்.
இவண்
இந்துசமயமன்றம்.

இந்துசமயமன்றம் “ஸ்ரீமஹாபெரியவருக்கு அனுஷ பூஜை”

ஸ்ரீகுருப்யோ நம!
20.01.2020 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் (மாநில அமைப்பாளர், இந்துசமயமன்றம் ) அவர்கள் இல்லத்தில் ஸ்ரீமஹாபெரியவருக்கு அனுஷ நக்ஷத்ர திருநாளில் விசேஷ பூஜை நடைபெற்றது. சிவனார்அகரம் ஸ்ரீமஹாபெரியவா பூஜைக்கு எழுந்தருளி அனுக்ரஹித்தார்.முதலில் ஸ்ரீகணேச, குரு த்யானமும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் ஸ்ரீகுருபாதுகைகளுக்கு அர்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பிறகு “பாகவத சேவா மணி” ஸ்ரீ. காசிராம பாகவதர் குழுவினரின் பஜனை நடைபெற்றது. மங்கள ஹாரத்தி மற்றும் ப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்துசமயமன்றத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவரான கல்பாக்கம் ஸ்ரீ.நாகராஜன், கவிஞர் சாணுபுத்திரன், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீகண்ணன்ஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீமதிகௌரி வெங்கட்ராமன் பூஜை ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.

மாட்டுப்பொங்கல் திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் சிறுமாத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சித்தநாயகி சமேத சித்தபுரீச்வரஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம், கோபூஜை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் பூஜைக்கான ஏற்பாடுகளை கிராமத்தார்கள் செய்திருந்தனர். இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் சொற்பொழிவு மற்றும் சமயமன்ற அன்பர் ப்ரம்மஸ்ரீ. ராமமூர்த்தி சர்மா ருத்ர பாராயணம் மற்றும் பூஜைகளை நடத்தினார்.திருக்கோவில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ஸ்ரீராம் அபிஷேகத்தை நடத்தியும் வெகு அழகாக அலங்காரம் செய்து வைத்தார். திரளாக ஊர்மக்கள் கலந்துகொண்டனர். வெகுவிரைவில் ஸ்ரீசித்தபுரீச்வரஸ்வாமிக்கு கும்பாபிஷேக வையவத்தை நடத்திட கூட்டுப்ரார்த்தனை செய்யப்பட்டது.

திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்

தென்னாடு அளித்த தெய்வப்புலவர், எந்நாட்டவர்க்கும் பொதுமறை தந்த புனிதர் மகான் திருவள்ளுவர் திருவடி போற்றி! போற்றி! அனைவருக்கும் இந்துசமயமன்றம் சார்பில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்!

“மாட்டுப்பொங்கல் திருவிழா”

தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் சிறுமாத்தூர் கிராமத்தில் அருள்மிகு சித்தநாயகி சமேத சித்தபுரீச்வரஸ்வாமி திருக்கோவில் வளாகத்தில் வருகிற 16.01.2020 வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன், மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு கோபூஜை, மற்றும் ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம், உலகநலன் வேண்டி கூட்டுப்ரார்த்தனை நடைபெற உள்ளது. ஆயிரம் வருடங்கள் பழமையான இத்திருக்கோவிலில் நடைபெற உள்ள வைபவங்களில் கலந்துகொள்ள வருகைதருமாறு அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.
ருத்ரபாராயணம் ப்ரம்மஸ்ரீ.ராமமூர்த்தி சர்மா அவர்கள், மறைமலைநகர்.

இவண்,
க.ஸ்ரீராம், NHTF
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,HSM
ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்,HSM
மற்றும் கிராமப்பொதுமக்கள்.

மாட்டுப்பொங்கல்


‘பசு’ என்கிற வார்த்தையை திருப்பி படித்தால் ‘சுப’ என்று வரும். பசுவினால் நமக்கு சுபங்கள் வரும் என்பதனால்தான் ஹிந்து தர்ம சாஸ்த்ரங்கள் பசுவை காப்பாற்றி வழிபட சொல்லியிருக்கிறது. காளையை தன் வாகனமாகக்கொண்டார் பரமேச்வரன். பசுவுடனேயே தன்னை நிலை நிறுத்தினார் கோபாலகிருஷ்ண பரமாத்மா. முப்பத்துமுக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வாசம் செய்வதால் பசுவை வழிபட்டால் அனைத்து தெய்வங்கள் ப்ரீத்தி அடைகிறார்கள். தாய்ப்பாலுக்கு அடுத்து பசுவின் பாலே உகந்ததாக உள்ளது. அதனால்தான் பசுவை கோமாதா என்கிறோம். நமது உணவிற்கு அரிசி விளைவிக்க பசு உதவுகிறது. தொல்தமிழ் இலக்கியங்கள் பசுவை போற்றுகிறது. அப்படிப்பட்ட பசுவிற்கு நன்றி செலுத்தும் பண்டிகை மாட்டுப்பொங்கல் பண்டிகை. பசுவிற்கு இயன்றவரை உணவளித்து பாதுகாக்க இந்த மாட்டுப்பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம். சனாதன ஹிந்து தர்மத்தின் முக்கிய கோட்பாடான பசுப்பாதுகாப்பை முன்னெடுப்போம்.
அனைவருக்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான ‘இந்துசமயமன்றத்தின்’ மாட்டுப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ஸ்ரீகுருப்யோ நம!

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் தைத்திங்கள் அனைவருக்கும் நல்லவற்றை வாரி வழங்கட்டும்!
வான்முகில் வழாது பெய்து, வளம் கொழிக்கும் நாடாக இப்பாரததேசம் விளங்கட்டும்!
உலகின் ஆன்மீக பூமியாம் இப்புனித பூமியின் சனாதன ஹிந்து தர்மம் செழிக்கட்டும்!
மக்கள் சகோதரத்துவம், சமாதானம், பரஸ்பர அன்புடன் தெய்வீக சிந்தனை வளர்ந்து மகிழ்ச்சியாக வாழட்டும்!

நல்வாழ்த்துக்களுடன்,
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
ஸ்ரீமதி கௌரிவெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு.