
ராம நவமி வாழ்த்துக்கள்



இந்துசமயமன்றம் அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த ப்லவ வருஷம் அனைவருக்கும் நலமுடன் வளத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக அமைய ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் திருவடிகளை ப்ரார்த்திக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
மற்றும்
ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.






ஸ்ரீகுருப்யோ நம!
இந்துசமயமன்றம் சார்பில் டிபன்ஸ் காலனி அருள்மிகு வரசித்தி வினாயகர் திருக்கோவில் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை சமயத்தில் 26.03.2021 வெள்ளிக்கிழமையன்று உலகநன்மைக்காக கூட்டுப்ரார்த்தனை, குரு வணக்க வழிபாடு சிறப்பாக நடத்தினார்கள். அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் ஸ்ரீபுதுப்பெரியவரின் மகிமைகளை எடுத்துக்கூறினார்கள்.கிளை அமைப்பாளர் திருமதி. தாரா தேவராஜ் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்கள்.

ஸ்ரீ லஸ்ரீ
ஜெயேந்திர
சரஸ்வதி
சுவாமிகள்…!
💐🙏🏻💐
*
ஜெகம் போற்ற
வந்தவர்..!
அருளாசி
தந்தவர்…!
💐
மனிதநேயம்
மிக்கவர்..!
மதித்துப்
போற்றத்
தக்கவர்…!
💐
“ஜனகல்யாண்”
கண்டவர்..!
தேனார் அமுதம்
உண்டவர்…!
💐
சிரிப்பால்
உலகை
ஈர்த்தவர்..!
ஜனங்களை
சமமாய்ப்
பார்த்தவர்..!
💐
ஜாதிபேதம்
அற்றவர்..!
அனுபவங்கள்
கற்றவர்..!
💐
“சங்கரமடத்தின்
பேரொளி
பெரியவா”ளோடு
வாழ்ந்தவர்..!
💐
நெற்றி
நிறையப்
பூசியே
சிவனில்
தோய்ந்து
ஆழ்ந்தவர்..!
💐
இன்றையநாள்
திருவிழா..!
ஆராதனைப்
பெருவிழா..!
💐
மக்களோடு
மக்களாய்ப்
பழகி வாழ்ந்த
மன்னவர்…!
💐
நீதி நேர்மைக்
கதைகளை
குழந்தைகட்குச்
சொன்னவர்..!
💐
காஞ்சி சங்கர
மடத்தினை
அன்பால்
உயர்த்தி
ஆண்டவர்..!
💐
ஏழைகளின்
சிரிப்பிலே
இறைவனைக்
கண்டு
மீண்டவர்..!
💐
ஜெகத்குரு
ஜெயேந்திரர்
பாத மலர்
பணிவமே..!
💐
சுவாமிகளின்
திருவடித்
தாமரைமலர்
அணிவமே..!
💐
எண்ணிக்கை
யற்ற
கோயில்களின்
கும்பாபிஷேகம்
நடத்தினார்..!
💐
ஆன்மிக
உலகின்
ஆதவனாகித்
தீயசக்தியை
அடக்கினார்..!
💐
ஜெகத்குரு
ஜெயேந்திரர்
காட்டியவழியில்
செல்வமே…!
💐
அவருடைய
கொள்கைகளை
உலகிற்கு
எடுத்துச்
சொல்வமே..!
💐
ஜெகத்குரு
ஜெயேந்திரர்
வாழ்க ! வாழ்க.!
வாழ்கவே..!
💐
அவருடைய
அருளாசி
உலகமெங்கும்
சூழ்கவே..!
💐🙏🏻💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
26.03.2021.
தினம்ஒருகவிதை
எண்.868.
🦚
ஜெகத்குரு
ஜெயேந்திரர்
திருவடி
போற்றி போற்றி!
💐🙏🏻💐








சனாதன தர்மத்தை வாழவைக்க வாராது வந்த மாமணியாம் நமது ஜகத்குரு!
அயோத்தி ராமபிரான் ஆலய புனர்நிர்மாணப்பணியில் ஸ்ரீஸ்வாமிகளின் கைங்கர்யம் அதிகம்!
மஹாஸ்வாமிகள் ஆசியுடன் இந்துசமயமன்றத்தை போஷித்து வளர்த்த பெருந்தகை!
பட்டிதொட்டியெலாம் சென்று தனது இன்முகம் காட்டி அனைவருக்கும் ஆசி வழங்கிய வள்ளல்!
ஆதிசங்கரருக்குப்பிறகு பாரத தேசமெங்கும் பவனிவந்து ஹிந்து தர்மத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஜகத்குரு!
எண்ணிலடங்கா திருப்பணிகள்! வேதபாடசாலைகள், கல்விச்சாலைகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், ஏழை எளியோருக்காய் உதவிய உத்தம ஞானி!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் மூன்றாவது ஆராதனை தினத்தில் (26.03.2021) இந்துசமயமன்றம் தனது ஹ்ருதயபூர்வ அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்வாமிகளின் அருட்கமலமலரடிகளில் சமர்ப்பிக்கிறது.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்
மற்றும்
இந்துசமயமன்ற அன்பர்கள்

அத்வைத ஞான மூர்த்தி ஆனந்த மோன மூர்த்தி இச் சகம் வாழ வாழும்
ஈடிலா எம் குரு மூர்த்தி
உத்திராடம் உதித்த மூர்த்தி
ஊழ்வினை அகற்றும் மூர்த்தி
எத்தகு பிழை செய்தாலும் ஏழையேமை ஏற்கும் மூர்த்தி
ஒப்பிலா உண்மை அன்பு
ஓங்கிட அருளும் மூர்த்தி
ஒள டதம் போலும் நின்று
அகிலத்தைக் காக்கும் மூர்த்தி
இஃது எம் தோத்திரப் பா
ஏற்றெமை ஆண்டருள்க!
பூஜ்ய ஶ்ரீ சுவாமிகளின் 53வது ஜெயந்தி நன்னாளில் அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்.
வ.ச. ஶ்ரீகாந்த் – இந்து சமய மன்றம்

ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70 பீடாதிபதிகள் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் அவர்களின் 53வது ஜயந்தி நன்னாளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்வாமிகளின் திருவடிக்கமலங்களில் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பணம் செய்கிறோம்.
இந்துசமயமன்றம்
அமைப்பாளர்கள் மற்றும் அன்பர்கள்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.


இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஜயந்தி விழா – கோபூஜை
தண்டலம் (ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலம்)
05.03.2021 வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலத்தில் கோபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. ஊர்மக்கள் அவரவர் வீட்டு பசுமாடு கன்றுக்குட்டியுடன் அழைத்துவந்தனர். இருபத்தோரு பசுமாடுகளுக்கு தண்டலம் வேதபாடசாலை வளாகத்தில் பூஜை வேதவிற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பெற்றது. ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி பசுக்களின் மஹிமைகள் பற்றிய விளக்கினார். ஸ்ரீ.ஸ்ரீதர்ஜி அவர்கள் ஆலோசனைகளுடனும், கிராமப்பொதுமக்களின் மிகச்சிறப்பான ஒத்துழைப்புடனும் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடனும் கோபூஜைை விசேஷமாக நடந்தேறியது.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீ.வெங்கட்ராமன் (ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா)ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.


















