சாதுர்மாஸ்ய பிக்ஷாவந்தனத்தில் இந்துசமயமன்ற அன்பர்கள்
பிக்ஷாவந்தனம்
நமஸ்காரம்!
ஸ்ரீகுருப்யோ நமஹ!
ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளுக்கு பிக்ஷாவந்தனம் 11.09.24 அன்று இந்துசமயமன்றம் சார்பில் அமோகமாக நடைபெற்றது. ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் மிகுந்த சந்தோஷத்துடன் நமது சமர்ப்பணங்களை ஏற்று அனுக்ரஹித்தருளினார்கள். தமது திருவாக்கினால், “நன்னா அமோகமா பண்ணினேள். எல்லாரும் க்ஷேமமா இருங்கோ” னு அபய ஹஸ்தம் காட்டி ஆசீர்வதித்தருளினார்கள். ஜகத்குரு கடாக்ஷம் இந்துசமயமன்றத்திற்கு எப்போதும் உண்டு என்பது நாம்பெற்ற பெரும் பாக்கியமன்றோ.
இந்து சமயமன்றத்தின் சேவைப்பணிகளுக்கு தாங்கள் செய்யும் கைங்கர்யங்களுக்கு என்றும் அடியேன் தங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.தங்கள் குடும்ப க்ஷேமத்தை ப்ரார்த்தித்து பாதபூஜை செய்து ப்ரசாதம் (குங்குமம், மங்கள அக்ஷதை, விபூதி, ஸ்ரீமடம் காமாக்ஷி வெள்ளிக்காசு)ஸ்பீடு போஸ்டில் இன்று( 13.09.24) தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
ஜகத்குரு அருளாசியுடன் வாழ்க வளமுடன்! நலமுடன்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
இந்துசமயமன்றம்
பிக்ஷாவந்தனம் நடைபெற்றது
ஸ்ரீகுருப்யோ நமஹ!
இன்று 11.09.24 புதன்கிழமை காஞ்சி காமகோடி பீடம் ஆசார்ய ஸ்வாமிகளுக்கு சாதுர்மாஸ்ய பிக்ஷாவந்தனம் இந்துசமயமன்றமும், மறைமலைநகர் பிராமணர் சங்கமும் இணைந்து நடத்தினோம். நமது ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞத்தில் பிக்ஷாவந்தனத்திற்கு அன்பர்கள் வழங்கிய நிதி, மறைமலைநகர் பிராமணர்சங்க அன்பர்கள் அளித்த பொருள், நிதியுதவி, இந்துசமயமன்ற அன்பர்களின் உதவிகள் என ஸ்ரீபெரியவரின் பிக்ஷாவந்தனத்திற்கு மக்கள் அளித்த உதவிகளை வைத்து மிகச்சிறப்பாக பிக்ஷாவந்தனம் நடைபெற்றது.
பிக்ஷாவந்தனம் சமஷ்டியாக ஒன்று, இந்துசமயமன்றம் 50 பாதபூஜை மற்றும் பிராமணர்சங்கம் சமஷ்டி பிக்ஷாவந்தனம் 1 மற்றும் 15 பாதபூஜை மற்றும் அரிசி, பருப்பு வகைகள், சமையல் காய்கள்,பழ வகைகள், புஷ்பங்கள் என நமநு அன்பர்கள் வழங்கிய பொருட்கள் ஸ்ரீபெரியவாளோட அனுக்ரஹத்தால் நிறைய வழங்கினோம். இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்கள் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன், மற்றும் திரளான அன்பர்கள், சூளைமேடு இந்துசமயமன்றம் அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினர், ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜீ, வி.எச்.பி.ஸ்ரீராம், ஸாய்ராம், மறைமலைநகர் பிராமணர்சங்க தலைவர் ஸ்ரீ.ப்ரகாஷ், ஸ்ரீ.சுப்பிரமணிய ஸாஸ்த்ரிகள்,ஸ்ரீ.சௌம்யநாராயணன், ஸ்ரீமதி.மஹாலக்ஷ்மி கண்ணன், ஸ்ரீமதி.
உஷாகணேசன்,ஸ்ரீமுக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா ஸ்ரீ.வெங்கட்ஜி, ஸ்ரீ.சுப்ரமண்யன், ஸ்ரீ.ராமச்சந்திரன் ஸ்ரீமதி.ராதிகா ஸ்ரீராம் மற்றும் வேதபாரதி சந்திரசேகர் மற்றும் பல முக்கிய அன்பர்கள் கலந்துகொண்டனர். எண்பதுபேர் கலந்துகொண்டனர்.மாலையில் ஸ்ரீபெரியவர் அனைவரிடமும் மிக மகிழ்ச்சியுடன், மிக சிறப்பாக பிக்ஷாவந்தனத்தை நடத்தியதாக குறிப்பிட்டு ஆசி வழங்கினார். குருவின் அருளாசியைவிட நமக்கென்ன வேண்டும்?
ஸர்வம் குருதேவார்ப்பணமஸ்து!
எப்போதகத்தும் நினைவார்க்கிடரில்லைகைப்போதகத்தின் கழல்
ஸ்ரீக்ருஷ்ணனும் ருக்மணியும் திருக்கல்யாண கோலத்தோடு எழுந்தருளப்பண்ணிய காட்சி.
நாராயணீயத்தால் பாடிப்பரவிய ஆய்ப்பாடி கோபிகைகள்
அலைகடலெனத்திரண்டுவந்து ஆனந்தமாய் ஆயனை, மாயனை, வடமதுரை மைந்தனை நாவார நாராயணீயத்தால் பாடிப்பரவிய ஆய்ப்பாடி கோபிகைகள்.
இங்கே ஆண்பெண் பேதமில்லை, ஜாதிமத வித்யாசமில்லை. உயர்வு தாழ்வு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. பரமனிடம் பக்தி மட்டுமே ப்ரதானம். நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிற நம்பிக்கையே ஊன்றுகோல். எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நாம் ஆட்செய்வோம் என சங்கல்பித்தவர்கள் இவர்கள். சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்!