விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

“எப்போதகத்தும் நினைவார்க்கிடரில்லை
கைப்போதகத்தின் கழல்!”
முழுமுதற்கடவுள் விநாயகரின் திருவருளால் அனைவரும் நலமாக, வளமாக வாழ ஐங்கரனை ப்ரார்த்திக்கிறோம்!
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவைப்பிரிவு

ஓம் சாந்தி!

திருப்பனந்தாள் காசி மட அதிபர் எஜமான் ஸ்வாமிகள் பரிபூரணமடைந்தார்கள்…

தமிழும் ,வட மொழியும் நமது ஆன்மீகத்தின் இரு கண்களாக கருதியவர்..

வேத ஆகமங்கள், பன்னிரு திருமுறை களும் சைவ சமயத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள் என போற்றியவர்..

“வேதநெறி தழைத்தோங்க” எனும் சிறு நூலை எழுதி வேதநெறியின் மேன்மையை உணர்த்தியவர். நமது ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளை திருப்பனந்தாள் வரவழைத்து அன்புடன் போற்றியவர்.

வயது 90 கடந்திருந்தும் தன்னைவிட வயதில் இளையவரான தருமையாதின குருமஹாசந்நிதான ஸ்வாமிகளுக்கு தான் தருமபுர முதன்மை சீடர் என்ற முறையில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கியும்,கை லாகு போட்டும் நமக்கெல்லாம் குரு பீடத்திற்கு எவ்வாறு மரியாதை செய்யவேண்டும் என காட்டிய மஹான்..

தமிழக பாரம்பரிய மரபு வழி ஆன்மீகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..

திருப்பனந்தாள் ஆதீன குருமஹாசந்நிதானத்தின் பொன்னார் திருவடிகளில் இந்துசமயமன்றம் மலரஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது.
இவண்
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு

திருவிளக்கு பூஜை

03.08.25 ஞாயிறு ஆடிப்பெருக்கன்று மறைமலைநகர் JRK பள்ளியில், மறைமலைநகர் பிராமணர்கள் சங்கம், இந்துசமயமன்றம் மற்றும் வேதபாரதி இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜை. கொட்டும் மழையிலும் சுமார் நானுறு இந்து மகளிர் பங்கேற்ற இந்த பூஜையினை இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் நடத்திவைத்தார்.

குரு பூர்ணிமா


வந்தே ஸ்ரீகாமகோடி ஜகத்குரு பரம்பராம்!
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

ஆயிரம் பேருக்கு நீர்மோர்

07.07.2025 திங்கட்கிழமை தண்டலம் (ஸ்ரீபெரியவர்கள் அவதாரஸ்தலம்) ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீதரணீஸ்வரஸ்வாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேக வைபவத்தில் இந்துசமயமன்றம் சார்பில் ஆயிரம் பேருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் இதைக்கண்டு மகிழ்ந்து ‘நல்ல கைங்கர்யம்’ என பாராட்டி ஆசி வழங்கினார்கள்.

மணிவிழா

காஞ்சி ஸ்ரீமடத்தின் ஏனாத்தூர் சங்கரா கல்லூரி முதல்வரும், இந்துசமயமன்ற அமைப்பாளரும் என் அன்பு சகோதரருமான முனைவர் கலைராம.வெங்கடேசன் – சௌ.கிருஷ்ணவேணி தம்பதியரின் மணிவிழா இன்று காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் வேதோக்தமாக சிறப்பாக நடந்தது. இந்துசமயமன்றம் சார்பில் வாழ்த்துக்களை மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் தெரிவித்ததோடு மணிவிழா வாழ்த்துக்கவிதையையும் அனுப்பினார்.
வாழ்க மணிவிழா தம்பதியினர்!

மணிவிழா வாழ்த்து மடல்

அன்பின் ஆளுமை!
பண்பின் செழுமை!
பழக இனிமை!
பதவியில் நேர்மை!
உதவியில் தாய்மை!
உள்ளத்தில் தூய்மை!
உயர்ந்தோர் கேண்மை!
பாவலர் வாய்மை!
அறிவின் வளமை!
அனுபவச்செம்மை!
உழைப்பில் இளமை!
உன்னதத் தலைமை!
தமிழில் புலமை!
சமயச்சீர்மை!
பார்வையில் எளிமை!
சங்கராகல்லூரி பெருமை!
அருமைச்சகோதரர் முனைவர்.கலைராம.வெங்கடேசன் தம்பதியர் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் பூரண அருளாசியுடன் சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ இந்துசமயமன்றம் சார்பில் மணிவிழா நல்வாழ்த்துக்கள்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
அமைப்பாளர், இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பு
தலைவர், ஸ்ரீநந்திசித்தர் பீடம், திருநந்திகேச்சுரம்.

மஹாபெரியவர் ஜயந்தி மஹோத்ஸவம்

இந்துசமயமன்றம் – ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஜயந்தி மஹோத்ஸவம் – வைகாசி அனுஷம் (10.06.25 செவ்வாய்) காலை ஆவஹந்தீ ஹோமம், ஸ்ரீருத்ர ஜபத்துடன் ஸ்ரீமஹாபெரியவர் அபிஷேகம், பூஜைகள்,அன்னப்ரசாதம், மாலை நாம சங்கீர்த்தனத்துடன் மஹாதீபாராதனை, அருட் ப்ரசாதம்.