திருப்பனந்தாள் காசி மட அதிபர் எஜமான் ஸ்வாமிகள் பரிபூரணமடைந்தார்கள்…
தமிழும் ,வட மொழியும் நமது ஆன்மீகத்தின் இரு கண்களாக கருதியவர்..
வேத ஆகமங்கள், பன்னிரு திருமுறை களும் சைவ சமயத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள் என போற்றியவர்..
“வேதநெறி தழைத்தோங்க” எனும் சிறு நூலை எழுதி வேதநெறியின் மேன்மையை உணர்த்தியவர். நமது ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளை திருப்பனந்தாள் வரவழைத்து அன்புடன் போற்றியவர்.
வயது 90 கடந்திருந்தும் தன்னைவிட வயதில் இளையவரான தருமையாதின குருமஹாசந்நிதான ஸ்வாமிகளுக்கு தான் தருமபுர முதன்மை சீடர் என்ற முறையில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கியும்,கை லாகு போட்டும் நமக்கெல்லாம் குரு பீடத்திற்கு எவ்வாறு மரியாதை செய்யவேண்டும் என காட்டிய மஹான்..
தமிழக பாரம்பரிய மரபு வழி ஆன்மீகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..
திருப்பனந்தாள் ஆதீன குருமஹாசந்நிதானத்தின் பொன்னார் திருவடிகளில் இந்துசமயமன்றம் மலரஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது.
இவண்
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு

