ஸ்ரீ.நரேந்திர தாமோதரதாஸ் மோதிஜி அவர்களின் பிறந்தநாளில்

சனாதன தர்மத்தின் பாதுகாவலரும், நவ பாரதத்தின் யுகசிற்பியும், பாரதத்தாயின் தலைமகனுமான பாரதப்பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ.நரேந்திர தாமோதரதாஸ் மோதிஜி அவர்களின் பிறந்தநாளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. ஸ்ரீமோதிஜி அவர்கள் எல்லாவித நலன்களும் பெற்று பல்லாண்டுகாலம் பாரதத்தை வழிநடத்திட ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருவடிகளை ப்ரார்த்திக்கிறோம்.
இவண்
இந்துசமயமன்ற அமைப்பாளர்கள் மற்றும் அன்பர்கள்.

ஸரஸ்வதி மஹராஜ் அவர்கள் மஹாஸமாதி அடைந்தார்

ஸ்ரீசங்கர சம்ப்ரதாய பீடங்களில் த்வாரகா மற்றும் ஜோஷி மடத்தின் (த்வி)பீடாதீச்வரராக இருந்து அருளாட்சி நடத்திய ஜகத்குரு சங்கராசார்யார் பூஜ்ய ஸ்ரீ ஸ்வரூபானந்த ஸரஸ்வதி மஹராஜ் அவர்கள் மஹாஸமாதி அடைந்தார். நமது மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீஸ்வரர்களிடம் மிகுந்த அன்பும் அபிமானமும் கொண்டவர்கள். ஸ்ரீஸ்வாமிகளிடம் மறைவிற்கு இந்துசமயமன்றம் சார்பில் அஞ்சலி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறோம்.

இருளர் பகுதியில் அன்னதானம்

சேவாபாரதி தமிழ்நாடு, தாம்பரம் சார்பில் கீர்த்திமஹான் அன்னதான யோஜனா திட்டத்தின் கீழ் 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கூடுவாஞ்சேரி அருகில் வல்லாஞ்சேரி இருளர் பகுதியில் அன்னதானம் (லட்டு, புளியோதரை, உளுந்து வடை, ஆவின் பால் பாக்கெட், மினரல் வாட்டர் பாட்டில்) வழங்கப்பட்டது. அவ்வமயம் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் இருளர் மக்களுக்கு நமது இந்து தர்மம் பற்றியும் கொரானோ தடுப்பூசி போடுவதின் அவசியம் பற்றியும் விளக்கினார். அனுஷ அமிர்தம் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், இந்துசமயமன்ற அன்பர் ஸ்ரீ.சாயிராம், ஊர் அன்பர் ஸ்ரீ.அருள் ஆகியோர் வந்திருந்தனர்.

ஸ்ரீ.தத்தாத்ரேய ஹொசபளேஜீ அவர்களை சென்னை தாம்பரம் ஸ்வதந்திர தின விழாவில் சந்தித்தபோது

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத பொதுச்செயலாளர் ஸ்ரீ.தத்தாத்ரேய ஹொசபளேஜீ அவர்களை சென்னை தாம்பரம் ஸ்வதந்திர தின விழாவில் சந்தித்தபோது புலவர் ஸ்ரீ.க.ஆத்ரேய சுந்தரராமனிடம் இந்துசமயமன்ற சேவைப்பணிகளைப்பற்றி மிக ஆர்வத்துடன் கேட்டறிந்தார். உடன் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபாஸ்ரீ.வெங்கட்ராமன் மற்றும் அனுஷ அமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரன், ஆடிட்டர்.ஸ்ரீகாந்த்ஜீ.

ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்திவிழா

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்புகளான இந்துசமயமன்றம், ஜனகல்யாண் மாடம்பாக்கம் சார்பில் இன்று 14.08.22 ஞாயிறன்று நடைபெற்ற ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்திவிழா மற்றும் இந்துசமயமன்ற பொன்விழா நிகழ்ச்சியாக 108 திருவிளக்கு பூஜை மிகச்சிறப்பாக கிழக்கு தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.பல்வேறு ஆன்மீக அமைப்புகளின் அன்பர்களும் பங்கேற்றனர்.ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் ப்ரசாதம், திருவிளக்கு,பூஜைப்பொருட்கள், மங்கலப்பொருட்கள் பங்கேற்ற மகளிருக்கு வழங்கப்பட்டது.

ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் 88வது ஜயந்தி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பூஜை

இந்துசமயமன்றம் சார்பில் பொன்விழா ஆண்டில் (1972 – 2022) ஸ்ரீரமணீ ஹால், நங்கநல்லூரில் 12.08.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் 88வது ஜயந்தி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பூஜை வெகு கோலாகலமாக நடைபெற்றது. செல்வி. சமன்விதா ஸ்ரீனிவாசனின் இறைவணக்கத்துடன், புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமனின் சமயமன்ற அறிமுகம் மற்றும் வரவேற்புரையுடனும் விழா துவங்கியது. பூஜ்யஸ்ரீ.கங்கோத்ரி ஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ.நாராயண தீர்த்த மஹாஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ.அபிநவ சிவ சச்சிதானந்த மஹாஸ்வாமிகள்,விஸ்வேஸ தீர்த்த மஹாஸ்வாமிகள் விழா மண்டபத்திற்கு எழுந்தருளி அருளாசியுரை வழங்கினர். ஸுவாஸினிகளின் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீலலிதா த்ரிபுரசுந்தரி பூஜை, ஒவ்வொருவருக்கும் ஸ்ரீலலிதாம்பாள் விக்ரஹம் அளிக்கப்பட்டு ஸஹஸ்ரநாம குங்குமார்ச்சனை, கன்யா பூஜை, ஸௌபாக்ய திரவியங்கள், பிளவுஸ்பிட், லட்டு ப்ரசாதம் வழங்கப்பட்டது. விழா சிறப்புரை ஆடிட்டர் ஸ்ரீ.V C.ஸ்ரீகாந்த்ஜி தாம் புதுப்பெரியவர் மீதியற்றிய கவிதையுடன் உரையாற்றினார். சமயமன்ற அமைப்பாளர்.ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமனின் நன்றியுரையுடன் அருமையான இரவு உணவுடனும் விழா இனிதே ஸ்ரீஆசார்யாள் க்ருபையுடன் நடந்தேறியது. இவ்விழாவில் கவிஞர்.சாணுபுத்திரன், ஸ்ரீரமணி ஹால் ஸ்ரீ.மகேஷ், ஸ்ரீ.நாராயணன்ஜீ, ஸ்ரீஹரிஹரன்ஜீ, ஸ்ரீரகுராமன்ஜீ,மற்றும் இந்துசமயமன்ற பல்வேறு கிளை அன்பர்கள், மூத்த அமைப்பாளர்கள்,ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்சுரல் பெடரேஷன் அன்பர்கள், நாராயணீய பாராயண குழுவினர்,மறைமலைநகர் பிராமணர்சங்க அன்பர்கள், நங்கநல்லூர் ஸத்ஸங்கத்தினர் கலந்துகொண்டனர்.