ஸ்ரீஸ்ரீஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களில் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை இந்துசமயமன்றம் சார்பில் சமர்ப்பிக்கிறோம்.

மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் எழுபதாவது பீடாதீச்வரரும், ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 56வது ஜயந்தித்திருநாளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களில் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை இந்துசமயமன்றம் சார்பில் சமர்ப்பிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு.

கோபூஜை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீபாலபெரியவர்கள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் அவதரித்த தண்டலம் கிராமத்தில் ஸ்ரீசங்கரவேதபாடசாலையில் நடைபெற்றுவரும் வேதோக்தமான ஸ்ரீஸ்வாமிகளின் 56வது ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி மூன்றாவது வருஷமாக இன்று 05.03.24 செவ்வாய்கிழமை இந்துசமயமன்றம் சார்பில் தண்டலம் ஊர்பொதுமக்கள் ஆதரவுடன் வெகுசிறப்பாக நடைபெற்ற கோபூஜை சில காட்சிகள்.

அதிருத்ர மஹா யக்ஞம்

ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயாவில் கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் வேதபாரதி சார்பில் நடைபெற்ற அதிருத்ர மஹா யக்ஞத்தில் சுமார் ஆயிரத்து முந்நூறு பேர் ஸ்ரீருத்ர பாராயணம், பதினோரு ஹோம குண்டங்களில் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற்றது. ஸ்ரீநெரூர் ஸ்வாமிகள், ஸ்ரீமுல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் வருகை புரிந்தனர். அச்சமயம் நமது இந்துசமயமன்றம் சார்பில் வேத பண்டிதர்கள் அனைவருக்கும் 1800 மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. கோபூஜைக்கு நமது பெருங்களத்தூர் இந்துசமயமன்ற அமைப்பாளர் திரு.ஷ்யாம் அவர்கள் கோசாலையிலிருந்து பூஜைக்கு ராஜஸ்தான் நாட்டுப்பசுமாடு அழைத்துவந்து பூஜை செய்யப்பட்டது. மற்றும் சுத்தமான பசும்பால் வழங்கப்பட்டது.

ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்

ஜெய் ஸ்ரீராம்!
இன்று 21.01.24 ஞாயிறன்று மாலை அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மிக விமரிசையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு லோகக்ஷேமத்தை ப்ரார்த்தித்து ஸ்ரீஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனூமத் சமேத ஸ்ரீராமபிரானுக்கு விசேஷ பூஜைகள், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், நாமராமாயண பாராயணம், ஸ்ரீராம நாம ஜபம், புஷ்பாஞ்சலி ஆகியவை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக எமது இல்லத்தில் நடைபெற்றது. அவ்வமயம் அயோத்தி ராமர் ஆலயம் அமைய ஸ்ரீகாஞ்சி சங்கரமடம் ஆற்றிய பணிகள், ஸ்ரீஆசார்ய மும்மூர்த்திகளின் அருளாசிகள் ஆகியவை இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் அவர்களால் பக்தியுடன் எடுத்துக்கூறப்பட்டது. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளர் டாக்டர் ஸ்ரீராம், அனுஷ அமிர்தம் நிறுவனர் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், பேராசிரியர் டாக்டர்.சிவ சிதம்பரநாதன் மற்றும் பல அன்பர்கள் கலந்துகொண்டனர். இந்துசமயமன்றம், அனுஷ அமிர்தம், பகுதிவாழ் அன்பர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக சுவையான இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்துசமயமன்றம் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை மற்றும் பொங்கல் விழா


08.01.24 திங்கட்கிழமை புதுப்பெருங்களத்தூர் நவஜீவன் முதியோர் மற்றும் கண்பார்வையற்றோர் இல்லத்தில் ஸ்ரீமஹாபெரியவர் ஆராதனையை முன்னிட்டு சிறப்பு ப்ரார்த்தனை மற்றும் பொங்கலுக்கு புத்தாடை வழங்கி உணவளிக்கும் நிகழ்ச்சி ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்துசமயமன்றம் சார்பில் பழங்குடி மக்களுக்கு ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருள் வழிகாட்டுதலில் அவர் அருளாலே அவர்திருத்தாள் வணங்கி, இந்த வருடமும் வழக்கம்போல பொங்கல் பொருட்கள் (பொன்னி பச்சரிசி, பாகு வெல்லம், பசுநெய், முழு முந்திரி, பாசிப்பருப்பு, ஏலக்காய், உலர்திராட்சை) பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் வழங்கப்பட்டது.

இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீமஹாபெரியவர் வீதியுலா, விசேஷ அனுஷ பூஜை

07.01.24 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆதம்பாக்கம் சாந்தி நகர் 11 வது தெரு ஸ்ரீமதி.பிருந்தா மாமி அவர்கள் இல்ல வளாகத்திலிருந்து பாண்டுரங்கன் ரகுமாயி திருக்கோவிலை பிரதக்ஷிணமாகச்சுற்றி மஹாபெரியவர் வீதியுலா ஹரஹர சங்கர ஜய கோஷத்துடன் நடைபெற்றது. பிறகு ஸ்ரீமஹாபெரியவர் பூஜா க்ரமப்படி வெகு விமரிசையாக அனுஷ பூஜை நடைபெற்றது. ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனை சமயத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு மஹாபெரியவர் அருட்ப்ரசாதம் வழங்கப்பட்டது.