இந்துசமயமன்றம் சார்பில் தண்டலத்தில் (ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவதாரஸ்தலம்)திருவிளக்கு பூஜை 16.4.22 சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஊர் பொதுமக்களின் பேரதரவுடன் நடைபெற்றது. 180க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.முன்னதாக தண்டலம் கிராம தேவதை அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபெரியவர் திருவுருவப்படம் பல்லக்கில் வைத்து விழா நடைபெறும் இடமான ஸ்ரீகாமாக்ஷி அம்மன் சமேத தருணீச்வரஸ்வாமி ஆலயத்திற்கு பாகவர்களின் நாமசங்கீர்த்தனத்துடன் கொண்டுவரப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்தனர். திருவிளக்கு பூஜையை இந்துசமயமன்ற அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் நடத்தி வைத்தார்.ஸ்ரீசங்கரா கலைக்கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரி முதல்வர் முனைவர்.கலை.ராம வெங்கடேசன் தலைமையில் வந்து உதவினர்.ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, விஎச்பி பிரமுகர் ஸ்ரீ.ஸ்ரீராம்ஜி, ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜி, ஸ்ரீனிவாசன்ஜி, சென்னபுரி இந்துசமயமன்றம் ஸ்ரீ.ஹரிஹரன்ஜி,சமுதாயக்கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.M.K.ஸ்ரீதர்ஜி,கவுன்சிலர்.ஸ்ரீமதி.வித்யாலக்ஷ்மி மற்றும் கிராமப்பெரியோர்கள் கலந்துகொண்டனர்.
Author: admin
இருளர் பழங்குடியினர் பகுதியில் அன்னதானம்
ஸ்ரீமந்நாராயணீய ஏகதின பாராயணம்
இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர் சங்கம் இணைந்து இன்றைய (12.4.22) ஏகாதசி நன்னாளில் ஸ்ரீமந்நாராயணீய ஏகதின பாராயணம்.
ராதா மாதவஸ்வாமி, நமசங்கீர்த்தனத்துடன் நகர்வலக்காட்சிகள்.
இருளர் பகுதியில் அன்னதானம்
அனுஷநக்ஷத்ர சிறப்பு பூஜை
இன்று மாலை (23.03.22, புதன்கிழமை மாலை) மறைமலைநகர் இந்துசமயமன்றம் சார்பில் அமைப்பாளர் ஸ்ரீ.ப்ரகாஷ் அவர்கள் இல்லத்தில் ஸ்ரீமஹாபெரியவரின் அவதாரத்திருநக்ஷத்ரமாகிய அனுஷநக்ஷத்ர சிறப்பு பூஜை, வேதபாராயணம், ஸ்ரீலலிதா, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், மகளிர் கும்மிப்பாட்டு, அஷ்டோத்ர பூஜை என மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது.
சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் நான்காவது வருஷ ஆராதனை
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் நான்காவது வருஷ ஆராதனை நாளில் (15.03.22, செவ்வாய்கிழமை) ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிக்கமலங்களில் ஹ்ருதயபூர்வமான பக்தியுடன் அனேக கோடி வந்தனங்களுடன் நமஸ்கரிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்,
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்,
மற்றும் கிளைஅமைப்பாளர்கள்,அன்பர்கள்.
நான்காவது வருஷ ஆராதனையை
இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடம் ஸ்ரீபுதுப்பெரியவர் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் நான்காவது வருஷ ஆராதனையை முன்னிட்டு களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் அன்னதானம் (ஜாங்கிரி, கீரை வடை, வெஜிடபிள் பிரிஞ்சி சாதம்) வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில் அன்பு சகோதரர் ஸ்ரீ.ஸ்ரீராம்ஜி (செங்கை மாவட்ட செயலாளர்,விஸ்வ ஹிந்து பரிஷத்)அவர்கள் கலந்துகொண்டு அன்னதானம் உபயமாக வழங்கினார்.
























