இந்த விசுவாவசு வருஷத்திய தீபாவளி நன்னாளில் திருக்கோவில் மூல மூர்த்திகளுக்கும் ஆலய அர்ச்சகர்களுக்கும் புது வஸ்த்ரம் வழங்கினோம். தீபாவளியன்று புதுவஸ்த்ரம் சாற்றி அலங்காரம் பண்ணி அனுப்பியுள்ளனர். வஸ்த்ரம் வழங்கிய, உதவிய அன்பர்களுக்கு பகவான் அனுக்ரஹம் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்திக்கிறோம். இந்துசமயமன்றம்
நமஸ்காரம்! ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் இந்த விஸுவாவஸு வருஷ தீபாவளிக்கு வேதபாடசாலைக்கு (பாடசாலை குழந்தைகள், வேத வாத்யார்கள், அவர்கள் மனைவிக்கு) வஸ்த்ரம் சமர்ப்பணம், திருக்கோவில்களுக்கு வஸ்த்ரம், மங்கல பொருட்கள் (ஸ்வாமிக்கு மற்றும் பூஜை பண்ணும் அர்ச்சகர் மற்றும் அவர் மனைவிக்கு), முதியோர் இல்லத்திற்கு திரவிய (அரிசி, வெல்லம், பருப்பு) சமர்ப்பணம் என நல்லபடியாக நல் உள்ளங்களின் ஒத்துழைப்புடன் நிறைவேறியது. இந்த சத்கைங்கர்யத்தில் பங்குகொண்ட அனைத்து பெருமக்களுக்கும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் ஆயுராரோக்ய ஸௌக்யத்தை அருள ப்ரார்த்திக்கிறோம். க.ஆத்ரேய சுந்தரராமன் கௌரி வெங்கட்ராமன் இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் ஒரு அங்கமான ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதியின் ஐந்தாவது மேளா 5.10.2025 அன்று சென்னை ராஜகீழ்பாக்கம் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமி வித்யா மந்திரில் மிகப்ரம்மாண்டமாக, மிக கோலாகலமாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் முன்னிலையில் ஸ்ரீஸ்வாமிகளின் ஆக்ஞையின்பேரில் நடத்தப்பெற்றது. இந்துசமயமன்றம் ஏற்பாட்டில் நடந்த இந்த புனித மேளாவில் ஆயிரம் பேர் வரை க்ருஷ்ணபக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் மகுடமாக ஸ்ரீசரணர்கள் அனுக்ரஹ பாஷணம் வழங்கினார்கள். இந்த நிகழ்வினை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம்.
திருப்பனந்தாள் காசி மட அதிபர் எஜமான் ஸ்வாமிகள் பரிபூரணமடைந்தார்கள்…
தமிழும் ,வட மொழியும் நமது ஆன்மீகத்தின் இரு கண்களாக கருதியவர்..
வேத ஆகமங்கள், பன்னிரு திருமுறை களும் சைவ சமயத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள் என போற்றியவர்..
“வேதநெறி தழைத்தோங்க” எனும் சிறு நூலை எழுதி வேதநெறியின் மேன்மையை உணர்த்தியவர். நமது ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளை திருப்பனந்தாள் வரவழைத்து அன்புடன் போற்றியவர்.
வயது 90 கடந்திருந்தும் தன்னைவிட வயதில் இளையவரான தருமையாதின குருமஹாசந்நிதான ஸ்வாமிகளுக்கு தான் தருமபுர முதன்மை சீடர் என்ற முறையில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கியும்,கை லாகு போட்டும் நமக்கெல்லாம் குரு பீடத்திற்கு எவ்வாறு மரியாதை செய்யவேண்டும் என காட்டிய மஹான்..
தமிழக பாரம்பரிய மரபு வழி ஆன்மீகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..
03.08.25 ஞாயிறு ஆடிப்பெருக்கன்று மறைமலைநகர் JRK பள்ளியில், மறைமலைநகர் பிராமணர்கள் சங்கம், இந்துசமயமன்றம் மற்றும் வேதபாரதி இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜை. கொட்டும் மழையிலும் சுமார் நானுறு இந்து மகளிர் பங்கேற்ற இந்த பூஜையினை இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் நடத்திவைத்தார்.