இந்துசமயமன்றத்தின் சார்பில் நடத்தப்பெறும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமிற்கு வருகைதந்து இலவச கண் சிகிச்சை பெற அழைக்கிறோம்.

இந்துசமயமன்றத்தின் சார்பில் நடத்தப்பெறும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமிற்கு வருகைதந்து இலவச கண் சிகிச்சை பெற அழைக்கிறோம்.

ஸ்ரீகுருப்யோ நம ! 14.09.19 சனிக்கிழமை அன்று காஞ்சி ஸ்ரீமடத்தின் ஆழ்வார்பேட்டை முகாமில் இந்துசமய மன்ற பிக்ஷாவந்தனம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்றத்தின் மலரை ஸ்ரீபெரியவா வெளியிட இந்துசமய மன்றத்தின் மிகமூத்த அமைப்பாளர் ஸ்ரீ.ராம்ராம் சுந்தரராமன் பெற்றுகொண்டார். தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராமிற்கு கயிலாயச்செல்வர் விருது ஸ்ரீஸ்வாமிகள் அருட்கரங்களால் வழங்கப்பட்டது. வியாசர்பாடி சமயமன்ற கிளை ஸ்ரீஹரிஹரன்ஜி, சமயமன்ற பிரச்சாரகர் ஸ்ரீ.குமாரஸ்வாமிஜி, மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஸ்ரீ.சுந்தரராமன்ஜி, வளசரவாக்கம் சமயமன்ற கிளை.ஸ்ரீரகுராமன்ஜி, ஊரப்பாக்கம் கிளை ஸ்ரீமதி.பார்வதிமோகன், வண்டலூர் கிளை.ஸ்ரீமதி.அக்ஷயா ஸ்ரீராம், திண்டிவனம் கிளை அன்பர்கள், வியாசர்பாடி கிளை அன்பர்கள், பெருங்களத்தூர் கிளை. ஷ்யாம் மற்றும் பல அன்பர்கள் கலந்துகொண்டார்கள். தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் துணைத்தலைவர் சிவஸ்ரீ.சீத்தாராம சிவாச்சாரியார், சமயமன்ற மாநில அமைப்பாளர் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன், மற்றும் பலர் கலந்துகொள்ள விழா இனிதே நடந்தேறியது.




இன்று ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமட ஆழ்வார்பேட்டை முகாமில் இந்துசமயமன்றத்தின் பிக்ஷாவந்தனம் மற்றும் புஸ்தகம் வெளியீடு விஷயமாக ஸ்ரீஆசார்யாள் சந்நிதியில் ப்ரார்த்தித்து ஸ்ரீசரணர்களின் அனுக்ரஹப்ரசாதம் பெற்றோம். நமது சமயமன்ற அன்பரும் மிகச்சிறந்த ஆன்மீக எழுத்தாளருமான ஸ்ரீ.ஜே.கே.சிவன் அவர்களின் சதாபிஷேக பத்திரிகையை சமர்ப்பித்து ஸ்ரீபெரியவா அருட்ப்ரசாதத்தை பெற்றோம். அடியேனும், சகோதரி ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம், ஸ்ரீ.ஜே.கே.சிவன் அவர்களும் சாந்தம் ராம்மோகன் அவர்களும் சென்றிருந்தோம்.





“எப்போதகத்தும் நினைவார்க்கிடரில்லை கைப்போதகத்தின் கழல்” அனைவருக்கும் ஸ்ரீவினாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! அமைப்பாளர்கள், இந்துசமயமன்றம். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு.


ஆடி பூரத்தை முன்னிட்டு வல்லீபுரம் ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஶ்ரீகண்டீஸ்வரர் ஆலயத்தில் விளக்கு பூஜை இந்து சமய மன்றத்தின் சார்பில் வெகு சிறப்பாக நடை பெற்றது
ஸ்ரீகுருப்யோ நம!
“ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராச்சாரிய மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70வது ஆசார்ய ஸ்வாமிகள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் சன்யாஸ ஸ்வீகரண தினத்தில் ஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது.
அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.












பாரதத்தின் பிரதம மந்திரியாக மானனீய ஸ்ரீ.நரேந்திர தாமோதர தாஸ் ஸ்ரீமோதிஜி இரண்டாவது தடவையாக மிகப்பெரிய அளவில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று பொறுப்பேற்க உள்ளார். தேச பக்தி, தெய்வ பக்தி, சனாதன ஹிந்து தர்மத்தின்பால் மிகுந்த ஈடுபாடு, பொதுவாழ்வில் நேர்மை,நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதி என பன்முகத்தன்மை கொண்டவர் ஸ்ரீமோதிஜி. பெருமைமிகு ஸ்வயம் சேவக் அவர். அவருடைய தலைமையில் அமையும் அரசு தேசத்தின் நலனில் அதிக அக்கறையோடு மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்கும், உலக அரங்கில் பாரதத்தின் பெருமை பேசப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஸ்ரீமோதிஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை இந்துசமயமன்றம் தெரிவிக்கிறது.
நேற்று 21.05.2019 செவ்வாய் கிழமை மாலை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருள்மிகு மத்யகாசிஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தில் 1008 மகளிர் பங்கேற்ற பிரமாண்டமான திருவிளக்கு பூஜைக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ.சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் வருகை புரிந்து அருளாசி வழங்கினார். இந்துசமயமன்றம், ஜனகல்யாண் மாடம்பாக்கம், திருக்கோவில் வழிபாட்டுக்குழு, தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, சேவாபாரதி, ஸ்ரீஸ்கந்த சேவா சங்கம், ஸ்ரீசங்கரா கல்வி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீவாகீசர் அடியார் திருக்கூட்டம் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு சுமார் இரண்டாயிரம்பேர் வரை மக்கள் வந்திருந்து பக்தியுடன் பூஜையில் பங்கேற்றனர். அனைவருக்கும் சுவையான அன்னப்ரசாதம் வழங்கப்பட்டது.













ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் ஜயந்தித்திருநாள்!
“இந்துசமயமன்றம் ஸ்தாபகர் தினம்”
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக வீற்றிருந்து, நடமாடும் தெய்வமாக நம்மிடையே உலாவி இன்றளவும் சூக்ஷ்ம ஸ்வரூபமாக தோன்றாத்துணையாக நமக்கு வழிகாட்டி வரும் ஸ்ரீமஹாபெரியவர் என பக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் 126வது அவதார நன்னாள் இன்று. அனுஷ நக்ஷத்ரத்திற்கு பல பெருமை உண்டு என்றாலும் ஸ்ரீஆசார்யாள் ஜனித்த நக்ஷத்ரம் என்பதே இன்று ப்ரதான பெருமையாகிவிட்டது.
சனாதன ஹிந்து தர்மத்திற்கும் அதன் வேத வைதீக கர்மாக்களுக்கும் சடங்குகள் சம்ப்ரதாயங்களுக்கும் பலமுனைத்தாக்குதல்கள் நடந்தும், மதமாற்றங்கள் மற்றும் இறையச்சம் இல்லாதவர்கள் பேசிய அடுக்கு மொழிகளில் மயங்கியும், இனம், சாதி என குறுகிய வட்டத்தில் மக்கள் வலம்வரும் போக்கைப்பார்த்து வருத்தப்பட்டு பரமகருணையுடன் பரமேஸ்வரன் அவதாரமான ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் 1972ம் வருடம் தோற்றுவித்த அமைப்பு இந்துசமயமன்றம் ஆகும். புனித பாதயாத்திரைகள், கூட்டுப்ரார்த்தனைகள், திருவிளக்கு வழிபாடுகள், சமய போதனை வகுப்புகள், தேவார, திருவாசகம், திவ்யப்ரபந்த தமிழ் மறையை அனைவருக்கும் கற்றுத்தருதல்,தமிழ் நீதிநூல்களை குழந்தைகளுக்கு போதித்தல், அன்னதானம், ஞானதானம், இந்துக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை ஏற்படுத்துதல், எந்த சாதி மத வித்தியாசமும் பார்க்காமல் இயற்கை சீற்றங்களில் உதவுதல், பிடிஅரிசித்திட்டம் என இந்துசமயமன்றத்தின் நோக்கங்களை மிக அற்புதமாக வடிவமைத்துக்கொடுத்தவரும் நம் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர்தான். அவர் காட்டிய வழியில் எத்தனையோ தன்னார்வத்தொண்டர்களின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பில் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல் அன்றிலிருந்து இன்றுவரை ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் காட்டிய பாதையில் செயல்பட்டு வருகிறது சமயமன்றம்.
பாரத தேசமெங்கும் தன் திருப்பாதம் தோய நடந்து தன் அருட்பார்வையால் அகிலத்தை ஆன்மீக வழியில் திருப்பி ஜகத்குரு என்ற பெயருக்கேற்ப மஹாகுருவாக விளங்குகிறார் என மற்ற சமயத்தை சேர்ந்தவர்கள் கூட மதித்து வணங்கும்படி வாழ்ந்த குருதேவர் ஸ்ரீமஹாபெரியவர். அவரின் ஜயந்தித்திருநாளில் ஸ்ரீஆசார்யாள் நமக்கு அருளிய உபதேசத்தை மனதிற்கொண்டு மக்களுக்கு தொண்டாற்ற முனைவோம்.
அவருக்குப்பின் பீடமேற்ற ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளும் இம்மன்றத்தின் பணிகளுக்கு அருளாசி வழங்கி வந்தார்கள்.
இன்று ஞானசத்குருவாய் நம்மிடையே அருளாசி வழங்கிவரும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் இந்துசமயமன்றத்தின் புனருத்தாரணத்திற்கு பலவகையிலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அருளாசி வழங்கி வருகிறார்கள்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பெருமைமிகு ஜகத்குரு ஸ்ரீமஹாபெரியவராலேயே தோற்றுவிக்கப்பட்ட இந்துசமயமன்றத்தில் இணைந்து கைங்கர்யம் செய்வதே பெருமை, புண்ணியம் என மகிழ்வுடன் ஆங்காங்கு அவரவர் பகுதிகளில் ஆன்மீக சமுதாயப்பணிகளை செய்ய முன்வருவீர்.
“ஜகத்குரு திருவடிகள் போற்றி! போற்றி !”
புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன்,
திருமதி.கௌரி வெங்கட்ராமன்,
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
(ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமயச்சேவை அமைப்பு.)

